CINEMA
சந்தேகப்பட்ட நடுவர் மன்றம் ; அங்கேயே நடித்து காட்டி விருது பெற்ற சிவாஜி
சிவாஜியின் நடிப்பு பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. நடிகர் திலகம் என்றே பெயர் பெற்றவர். தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களில் விதவிதமாக நடித்து அசத்துவார். அப்படிப்பட்ட சிவாஜி கணேசன் நடிப்பிற்காக மக்களின் அன்பை மட்டுமல்ல பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
அப்படி ஒரு முறை சிவாஜியின் நடிப்பே கண்டு பிரெஞ்சு விருது குழுவினர் ஆச்சரியப்பட்டு போனர். இதுகுறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நவராத்திரி என்ற படத்தில் சிவாஜி கணேசன் ஒன்பது வேடங்களில் நடித்திருப்பார். இதை அவர்களுக்கு திரையிட்டு காட்டியபோது, படம் நன்றாக இருக்கிறது, ஒன்பது பேரும் அருமையாக நடித்திருந்தனர் என கூறினார்களாம்.
அதற்கு படத்தை திரையிட்டு காட்டியவர்கள், இந்த ஒன்பது பேரும் ஒரே ஆள் தான் என கூறியுள்ளனர். இதைக்கேட்ட நடுவர்கள் ஸ்தம்பித்து போய் என்ன சொல்றீங்க ஒரே ஆளா ? என கேட்டுள்ளனர். இதை நம்ப மறுத்து குழுவினர் சிவாஜி கணேசனை அழைத்து, அவரை டெஸ்ட் செய்துள்ளனர். அவரும் அழகாக அந்த ஒன்பது கதாபாத்திரங்களையும் நடித்து இவர்களை இன்னும் ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.
ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் சம்மந்தமே இல்லாமல் இருக்கிறது. அவ்வளவு வித்தியாசம் காட்டியிருக்கிறார். எப்படி இவரால் இப்படி நடிக்க முடிந்தது” என அசந்துப்போனார்களாம். அதன் பிறகுதான் இவர் செவாலியர் பட்டத்திற்கு தகுதியானவர் என முடிவுசெய்து சிவாஜி கணேசனுக்கு செவாலியர் பட்டம் வழங்கினார்களாம்.