Connect with us

CINEMA

நாட்டாமை பட காமெடியில் வந்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா..? இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் தொடர்ந்து ஹிட்டு திரைப்படங்களை கொடுத்து பிரபலமாக இருந்தவர் கே எஸ் ரவிக்குமார். கமர்சியல் படங்களின் ராஜாவாக திகழ்ந்த இவர் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நாட்டாமை. இப்படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடி மிகப்பெரிய உச்சத்தை எட்டியது. அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.

   

அந்த படத்தில் ஒரு சீனில் கவுண்டமணிக்கு பெண் பார்க்க செல்லும் போது பெண்ணின் அப்பா அருகே அமர்ந்து மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அந்த படத்தில் மிக்சர் சாப்பிடும் நபர் வேறு யாரும் கிடையாது. படபிடிப்பு தனது ஸ்விட்ச் போர்டு அருகில் உட்கார்ந்து பணிபுரியும் நபர்.

அவரை நடிக்க சொன்னபோது அவர் மிகவும் பயந்து போன காரணத்தினால் அவருக்கு வசனம் எதுவும் கொடுக்காமல் சும்மா உட்கார்ந்து மிச்சர் சாப்பிடுங்க என்று நடிக்க வைத்தாராம் கேஸ் ரவிக்குமார். அதைத்தொடர்ந்து பெண்ணை அழைத்து வரும்போது அவரது அம்மாவை பார்த்த செந்தில் தன் மனைவி என்று கூற கடைசியில் கவுண்டமணிக்கு தங்கச்சி முறையாகி விடுகின்றது அந்தப் பெண்.

இந்த காமெடியெல்லாம் அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. அதேபோல அந்த காட்சியில் வரும் பெண் பற்றி பலரும் தெரிந்திருக்க வாய்ப்பு கிடையாது. ஒரே ஒரு சீனில் மட்டும் தான் அவர் நடித்திருப்பார். அந்த படத்திற்கு பிறகு தற்போது லிங்கா படத்தில் கூட கேஸ் ரவிக்குமார் அவரை நடிக்க வைத்திருந்தார். அவருடைய தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் நாட்டாமை படத்தில் வந்த அந்த நடிகையா இது? என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top