Connect with us

CINEMA

தனலட்சுமிய ஒன்சைடா லவ் பண்ணேனா..? அந்த சீன்ல விஜய் சொல்லி தான் அடிச்சேன்.. கில்லி பட நடிகர் ராஜா பகிர்ந்த தகவல்..

சினிமாவை பொருத்தவரைக்கும் ஹீரோக்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்கின்றதோ அதே அளவு வில்லன்களுக்கும் இருக்கின்றது. ஒரு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி கொடுக்கிறது என்றால் அதில் நெகட்டிவ் ரோலில் நடிக்கும் வில்லன்களுக்கும் பங்கு இருக்கும். பல படங்களில் நடிக்கும் வில்லன்கள் ஒரு சில திரைப்படங்களுடன் காணாமல் போய்விடுவார்கள். ஒரு சிலர் மட்டுமே மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருப்பார்கள்.

   

அதுமட்டுமில்லாமல் வில்லன் கதாபாத்திரங்களுக்கு துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் சில நடிகர்கள் பெரிய அளவில் பேசப்படுவதே கிடையாது. வில்லன்களே நினைவில் இல்லாத போது அவர்களுக்கு துணையாக நடிக்கும் நடிகர்களை மட்டும் எப்படி ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும். அந்த வரிசையில் பல ஆண்டுகளாகவே பல படங்களில் வில்லன்களுக்கு துணை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கராத்தே ராஜா.

சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு கராத்தே வகுப்பு ஒன்றை நடத்தி வந்தார் அதுவே அவருக்கு பெயராக மாறிவிட்டது. இவர் பள்ளியில் கராத்தே சொல்லிக் கொடுப்பதற்காக சென்னைக்கு வந்தார். பின்னர் 2004 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான விருமாண்டி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதனை தொடர்ந்து விஜயின் கில்லி திரைப்படத்தில் பிரகாஷ்ராஜுக்கு துணையாக நடித்திருப்பார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இப்படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்று மனம் திறந்து பேசி இருக்கின்றார். கில்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டு சக்கபோடு போட்டு வருகின்றது. எந்த படத்திற்கும் கிடைக்காத வரவேற்பு இப்படத்திற்கு கிடைத்திருக்கின்றது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசி இருக்கின்றார் கராத்தே ராஜா.

அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: “கில்லி படத்தில் நடிகர் விஜயை  ஓடுஒன்று வைத்து அடிக்க வேண்டும். அதற்கு தனது மாஸ்டர் தான் வந்திருந்தார். அப்போது விஜயை அடிப்பதற்கு அவரே என்னை கூப்பிட்டு கராத்தே ராஜாவே இதனை செய்யட்டும் என்று கூறினார். ஸ்கிரீனில் தெரியக்கூடாது என்பதற்காக நான் சைடாக தான் நடித்திருப்பேன். அதையும் மக்கள் கண்டுபிடித்து விட்டார்கள்.

 

அதுமட்டுமில்லாமல் விஜய் த்ரிஷாவை கூப்பிட்டுக்கொண்டு செல்லும்போது ஒரு கார் சீன் இருக்கும். காரின் சாவி அப்போது காணாமல் போயிருக்கும். அதை பார்த்த பலரும் தனலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்திருந்த த்ரிஷாவை தான் ஒன் சைடாக காதலிப்பதாகவும், முத்துப்பாண்டிக்கு கிடைக்கக்கூடாது என்பதற்காகத்தான் சாவியை நான் திருடி வைத்துக் கொண்டதாக பலரும் கூறியிருந்தார்கள். இதையெல்லாம் ஒப்பிட்டு பார்க்கும்போது பொய்யாக சொன்னது கூட உண்மை என்பது போல் அந்த காட்சிகளில் தெரிகின்றது” என மனம் திறந்து பேசி இருந்தார்.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top