சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, மது அருந்த தந்தை பணம் தராத ஆத்திரத்தில் அவரது குடிசை வீட்டுக்கே மகன் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்ககிரி அரசிராமணி மேற்கு ஓலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜு என்பவரின் மகன் ரமேஷ், லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். மதுப் பழக்கத்திற்கு அடிமையான ரமேஷ், இதற்காகத் தந்தை ராஜுவிடம் அடிக்கடி பணம் கேட்டுத் தகராறு செய்து வந்துள்ளார்.
திங்கள்கிழமை இரவு மது அருந்த பணம் தருமாறு ரமேஷ் கேட்டபோது, தந்தை மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர், தந்தை வசித்து வந்த குடிசை வீட்டுக்குத் தீ வைத்துவிட்டுத் தப்பியோடினார். தீ மளமளவெனப் பரவியதில், ராஜுவின் வீடு மட்டுமின்றி அருகில் இருந்த உறவினர்களின் வீடுகள் என மொத்தம் மூன்று குடிசைகள் தீப்பற்றி எரிந்து நாசமாகின. இதில் வீட்டிலிருந்த நகை, பணம் மற்றும் மளிகைப் பொருட்கள் அனைத்தும் கருகிச் சேதமடைந்தன.
பொதுமக்கள் உடனடியாகச் செயல்பட்டு வீடுகளுக்குள் இருந்த எரிவாயு சிலிண்டர்களை வெளியேற்றியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எடப்பாடி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து ரமேஷின் தாய் மற்றும் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் தேவூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ரமேஷைத் தேடி வருகின்றனர்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…