அருகே இருந்த சிலிண்டர்…!! குடிபோதையில் மகன் செய்த காரியம்…. அடுத்தடுத்த வீடுகளுக்கும் தீ வைப்பு…. தப்பியோடிய லாரி டிரைவர்…!!

By Devi Ramu on மார்கழி 31, 2025

Spread the love

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, மது அருந்த தந்தை பணம் தராத ஆத்திரத்தில் அவரது குடிசை வீட்டுக்கே மகன் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்ககிரி அரசிராமணி மேற்கு ஓலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜு என்பவரின் மகன் ரமேஷ், லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். மதுப் பழக்கத்திற்கு அடிமையான ரமேஷ், இதற்காகத் தந்தை ராஜுவிடம் அடிக்கடி பணம் கேட்டுத் தகராறு செய்து வந்துள்ளார்.

திங்கள்கிழமை இரவு மது அருந்த பணம் தருமாறு ரமேஷ் கேட்டபோது, தந்தை மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர், தந்தை வசித்து வந்த குடிசை வீட்டுக்குத் தீ வைத்துவிட்டுத் தப்பியோடினார். தீ மளமளவெனப் பரவியதில், ராஜுவின் வீடு மட்டுமின்றி அருகில் இருந்த உறவினர்களின் வீடுகள் என மொத்தம் மூன்று குடிசைகள் தீப்பற்றி எரிந்து நாசமாகின. இதில் வீட்டிலிருந்த நகை, பணம் மற்றும் மளிகைப் பொருட்கள் அனைத்தும் கருகிச் சேதமடைந்தன.

   

பொதுமக்கள் உடனடியாகச் செயல்பட்டு வீடுகளுக்குள் இருந்த எரிவாயு சிலிண்டர்களை வெளியேற்றியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எடப்பாடி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து ரமேஷின் தாய் மற்றும் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் தேவூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ரமேஷைத் தேடி வருகின்றனர்.