“அவள் இப்படி செய்வாள்னு நினைக்கல…” வீட்டின் ஓட்டைப் பிரித்துப் பார்த்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. திருப்பூரில் நடந்த பயங்கரம்..!!

Spread the love

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த சொரியன்கிணத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் குமரேசன் (37). கூலித் தொழிலாளியான இவருக்கும், சோபியா (27) என்ற பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலர்ந்து, பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு காவியாஸ்ரீ (5), தன்னயா ஸ்ரீ (2) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மகிழ்ச்சியாகத் தொடங்கிய இவர்களது குடும்ப வாழ்க்கையில், நாளடைவில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சோபியா கோபித்துக்கொண்டு மூலனூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் செல்வதும், பின்னர் குமரேசன் அவரைச் சமாதானம் செய்து அழைத்து வந்து குடும்பம் நடத்துவதும் வழக்கமாக இருந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று காலையும் இவர்களுக்குள் வழக்கம்போல கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலும் ஆத்திரமும் அடைந்த சோபியா, திடீரென வீட்டிற்குள் சென்று கதவை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டார். வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சியடைந்த குமரேசன், பதற்றத்துடன் வீட்டின் மேற்கூரை (ஓடு) மீது ஏறிப் பிரித்துப் பார்த்துள்ளார். அப்போது சோபியா வீட்டிற்குள் தூக்கில் தொங்குவதைக் கண்டு அலறியுள்ளார். உடனே அக்கம் பக்கத்தினரின் உதவியோடு வீட்டின் கதவை உடைத்து, மயங்கிய நிலையில் இருந்த சோபியாவை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு சோபியாவை தீவிரமாகப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறு காரணமாக 5 வயது மற்றும் 2 வயதுக் குழந்தைகளைத் தவிக்க விட்டு, இளம்பெண் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட கொடூரச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்.. 61 வயது மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… பயங்கர அதிர்ச்சி..!!

சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: உடனே மூடுங்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

4 மணத்தியாலங்கள் ago

FLASH: அரசு எச்சரிக்கையை மீறி கூடுதல் கட்டணம் வசூல்… டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கைது..!!

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: “சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டத்தின் தொடக்க விழா ரத்து…!!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…

5 மணத்தியாலங்கள் ago

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வீதிமன்றப் போராட்டம்..! புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு.. அரசு ஊழியர்கள் சங்கம் கெடு…!!

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…

5 மணத்தியாலங்கள் ago

அரசியலை கடந்த பாசம்..! சீமான் வீட்டுக்கு அண்ணனாகச் சீர் கொண்டு சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்..! நெகிழ வைக்கும் பின்னணி…!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…

6 மணத்தியாலங்கள் ago