சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள தர்மஜெய்கர் வனப்பகுதியில், உயிரிழந்த தனது குட்டியை எழுப்ப ஒரு தாய் யானை போராடும் நெஞ்சை உருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பூசால்டா கிராமத்திற்கு அருகில் உள்ள குளம் ஒன்றில் குளிப்பதற்காக 39 யானைகள் கொண்ட கூட்டம் வந்தபோது, எதிர்பாராதவிதமாக ஒரு குட்டி யானை ஆழமான தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது.
தனது குட்டி இனி இந்த உலகத்தில் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத அந்த தாய் யானை, இரவு முழுவதும் அதன் உடலின் அருகிலேயே அமர்ந்திருந்தது. தன் குட்டிக்கு மீண்டும் உயிர் வந்துவிடாதா என்ற ஏக்கத்தில், அது தனது தும்பிக்கையால் குட்டியை மீண்டும் மீண்டும் தட்டி எழுப்ப முயன்றது. இந்த சோகமான காட்சியைக் கண்டு அங்கிருந்த கிராம மக்கள் மற்றும் வனத்துறையினர் கண்ணீர் வடித்தனர்.
இந்தத் துயரமான தருணத்தில் அந்த தாய் யானை மட்டும் அல்லாமல், கூட்டத்தில் இருந்த மற்ற யானைகளும் பிளிறியபடி தங்களின் ஆழ்ந்த கூட்டுத் துக்கத்தை வெளிப்படுத்தின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், குட்டியை விட்டு பிரிய மறுத்த தாய் யானையை நீண்ட போராட்டத்திற்குப் பிறகே அங்கிருந்து அப்புறப்படுத்தினர். விலங்குகளின் பாசத்திற்கும் தாய்மைக்கும் சான்றாக விளங்கும் இந்த உணர்ச்சிப்பூர்வமான வீடியோ பார்ப்போரின் நெஞ்சங்களை உருகச்செய்துள்ளது.
சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…