இமயமலையில் திடீரென ஏற்பட்ட பனிப்பாறை முறிவு காரணமாக வடக்கு நேபாளப் பகுதியில் உள்ள ஆறுகளில் பெருவெள்ளம் பாய்ந்தோடியது. இந்த இயற்கைப் பேரழிவால் அப்பகுதியில் இருந்த நான்கு ஊர்கள் முற்றிலும் சேதமடைந்தன. அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்களுடன் பொதுமக்களும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் இதுவரை 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இரண்டாயிரத்திற்கும் அதிகமானோரைக் காணவில்லை என்பதால் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நேபாளத்தில் நிகழ்ந்துள்ள இந்தப் பெரும் விபத்து அப்பகுதி மாநிலங்களை எச்சரிக்கையடையச் செய்துள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவின் சிக்கிம் மாநில அரசு உடனடியாகப் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. சிக்கிம் மாநிலத்தில் சிறியதும் பெரியதுமாக மொத்தம் நானூறுக்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் உள்ள நிலையில், அவற்றில் மிக ஆபத்தானவை எனக் கண்டறியப்பட்ட 16 ஏரிகளில் நவீன சென்சார்களைப் பொருத்த அரசு திட்டமிட்டுள்ளது.
சிக்கிம் மாநிலத்தைப்போலவே சீனா, திபெத் மற்றும் நேபாள எல்லைகளுக்கு உட்பட்ட இமயமலைப் பகுதிகளிலும் உள்ள அபாயகரமான பனிப்பாறைகளில் விரைவில் சென்சார்கள் பொருத்தப்பட உள்ளன. இத்தகைய முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் எதிர்காலத்தில் பனிப்பாறை வெடிப்பு நிகழ்வுகளைத் துல்லியமாகக் கண்டறிந்து, உடனடி எச்சரிக்கை விடுக்கவும், அதன் மூலம் பெருமளவிலான உயிர் மற்றும் பொருள் சேதத்தைத் தவிர்க்கவும் பெரிதும் உதவிபுரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…