புருஷன், 3 வயது பிள்ளையை விட்டுட்டு ஏன் போன…? மகளை தேடி கண்டுபிடித்து தந்தை செய்த கொடூரம்…. பகீர் பின்னணி…!!!

Spread the love

திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையம் பகுதியில், தனது கணவர் மற்றும் மூன்று வயது குழந்தையைப் பிரிந்து கள்ளக்காதலனுடன் சென்ற மகளைத் தந்தையே கத்தியால் அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிம்யா என்ற இளம்பெண்ணிற்கு திருமணமாகி ஒரு குழந்தை இருந்த நிலையில், இன்ஸ்டாகிராம் வழியாக அறிமுகமான நபருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மகளைக் காணவில்லை எனத் தந்தை ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் சிம்யாவை கன்னியாகுமரியில் மீட்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

வீட்டிற்கு வந்த மகளிடம் குடும்ப மானத்தைக் கெடுத்துவிட்டு ஏன் இப்படிச் செய்தாய் என ஆறுமுகம் கேள்வி எழுப்பியபோது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற தந்தை, வீட்டில் இருந்த கத்தியை எடுத்துச் சிம்யாவின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தார். ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த மகளின் அருகே அமர்ந்து அவர் அழுது கொண்டிருந்த நிலையில், வெளியில் சென்று திரும்பிய தாய் இதைக் கண்டு அலறினார். தகவல் அறிந்து வந்த வீரபாண்டி போலீசார், சிம்யாவின் உடலைக் கைப்பற்றியதுடன் மகளைக் கொன்ற தந்தையைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

2 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

2 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

2 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

2 மணத்தியாலங்கள் ago