புருஷன், 3 வயது பிள்ளையை விட்டுட்டு ஏன் போன…? மகளை தேடி கண்டுபிடித்து தந்தை செய்த கொடூரம்…. பகீர் பின்னணி…!!!

Spread the love

திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையம் பகுதியில், தனது கணவர் மற்றும் மூன்று வயது குழந்தையைப் பிரிந்து கள்ளக்காதலனுடன் சென்ற மகளைத் தந்தையே கத்தியால் அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிம்யா என்ற இளம்பெண்ணிற்கு திருமணமாகி ஒரு குழந்தை இருந்த நிலையில், இன்ஸ்டாகிராம் வழியாக அறிமுகமான நபருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மகளைக் காணவில்லை எனத் தந்தை ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் சிம்யாவை கன்னியாகுமரியில் மீட்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

வீட்டிற்கு வந்த மகளிடம் குடும்ப மானத்தைக் கெடுத்துவிட்டு ஏன் இப்படிச் செய்தாய் என ஆறுமுகம் கேள்வி எழுப்பியபோது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற தந்தை, வீட்டில் இருந்த கத்தியை எடுத்துச் சிம்யாவின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தார். ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த மகளின் அருகே அமர்ந்து அவர் அழுது கொண்டிருந்த நிலையில், வெளியில் சென்று திரும்பிய தாய் இதைக் கண்டு அலறினார். தகவல் அறிந்து வந்த வீரபாண்டி போலீசார், சிம்யாவின் உடலைக் கைப்பற்றியதுடன் மகளைக் கொன்ற தந்தையைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

பகீர் கிளப்பும் மரணம்… 7- ஆம் வகுப்பு மாணவனுக்கு என்ன ஆச்சு?… ஏகலவ்யா மாதிரிப் பள்ளியில் தொடரும் சோகம்… கதறித் துடிக்கும் பெற்றோர்… பின்னணி என்ன?…

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மான்யம் மாவட்டம் அனசபத்ராவில் உள்ள ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப்…

10 minutes ago

“கட்சி இணைப்புக்கு நோ… கூட்டணிக்கு ஓகே…” மீண்டும் எழும் ‘பவர் சென்டர்’ பிரச்சனை…. டிடிவி தினகரனின் கோரிக்கையை ஏற்க இபிஎஸ் யோசனை…!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மீண்டும் அதிமுகவுடன் இணைக்க அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

11 minutes ago

திக் திக்… துரோகத்தை தட்டிக்கேட்ட சட்டக்கல்லூரி மாணவி… நடுரோட்டில் அரங்கேறிய வெறிச்செயல்.. பெங்களூரை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

பெங்களூரில் சட்டக்கல்லூரி மாணவியும், பிட்சா விற்பனை மைய ஊழியருமான 21 வயது அம்ருதா என்பவரைப் பின்னால் இருந்து தாக்கி கத்தியால்…

19 minutes ago

“ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்…” ரூ.1,200 கோடி மக்கள் பணம் வீண்… புதிய தலைமைச் செயலக திட்டத்திற்கு ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு…!!

சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 15 மாடிகளுடன் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கத் தமிழக…

25 minutes ago

“இந்தியாவுக்கு 100 சதவீத வரி…” அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிரடியாக நிறைவேறிய மசோதா… டிரம்ப் நடவடிக்கையால் பெரும் பரபரப்பு….!!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறை பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, ரஷ்யாவிடம்…

39 minutes ago