கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை…! பாறையில் மோதி கொன்ற தாய்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

Spread the love

கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள தையில் பகுதியை சேர்ந்த சரண்யா என்ற பெண், தனது கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த ஒன்றரை வயது குழந்தையை ஈவுஇரக்கமின்றி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு, தனது காதலன் நிதின் என்பவருடன் இணைந்து கடற்கரைக்குக் குழந்தையை அழைத்துச் சென்ற சரண்யா, அங்கிருந்த பாறையில் குழந்தையின் தலையை மோதச் செய்தும், தூக்கி எறிந்தும் கொடூரமாகக் கொன்றுள்ளார்.

ஆரம்பத்தில் குழந்தை காணவில்லை என்றும், தன் கணவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் நாடகமாடி போலீஸாரை திசைதிருப்ப முயன்றார். ஆனால், காவல்துறையின் தீவிர விசாரணையில் அவரது கள்ளக்காதல் விவகாரமும், குழந்தையைத் திட்டமிட்டுத் தீர்த்துக் கட்டிய உண்மையும் வெளிச்சத்திற்கு வந்தன.

இந்தக் கொடூரக் கொலை தொடர்பான வழக்கு தளிப்பரம்பு கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. இறுதி விசாரணையில், பெற்ற குழந்தையைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற சரண்யாவைக் குற்றவாளி என உறுதி செய்த நீதிபதி, அவருக்கான தண்டனை விவரங்களை அறிவிக்க உத்தரவிட்டார்.

அதே சமயம், இந்தக் கொலையில் தொடர்புடையதாக கருதப்பட்ட கள்ளக்காதலன் நிதின் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் இல்லாததால், அவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கள்ளக்காதல் மோகத்தால் பெற்ற பிள்ளையையே தாயே கொன்ற இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பலத்த கண்டனங்களை பெற்று வருகிறது.

Devi Ramu

Recent Posts

ஈரான் கடலில் பதற்றம்… இந்தியக் கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு?… நடுக்கடலில் ‘யூ-டர்ன்’ போட்ட 4 கப்பல்கள்…. என்ன நடந்தது…?

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்கள்…

1 minute ago

“அழிஞ்சு போயிரும் பாத்துக்கோங்க” இதை நான் சொன்னா நம்ப மாட்டாங்க… சீனாக்காரன் சொன்னா நம்புவாங்க… சீமான் காட்டம்…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று தீவிர வாக்குச்…

2 minutes ago

“டிரம்ப் Vs ஈரான்: ‘எங்களை மிரட்ட முடியாது’ – அமெரிக்காவின் அதிரடி பதிலடியால் பதற்றம் உச்சம்… ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் காட்டும் ஆக்ரோஷம்…!

மத்திய கிழக்கில் நிலவி வந்த தற்காலிக அமைதி மீண்டும் குலைந்துள்ளதால் உலக நாடுகள் பெரும் கவலையடைந்துள்ளன. சில நாட்களுக்கு முன்புதான்…

5 minutes ago

எங்க குடும்பம் பிரிஞ்சதுக்கு காரணம் சவுமியாதான்… கூடவே இருந்து என் முதுகில் குத்திட்டாங்க… உண்மையை உடைத்த ராம்தாஸ் மகள்…!!

தமிழக அரசியலில் நீண்டகாலம் செல்வாக்கு செலுத்தி வந்த பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது குடும்பப் பூசலால் பிளவுபட்டுள்ள நிலையில், டாக்டர்…

6 minutes ago

“இனி எங்க கண்ட்ரோல்”… “ஈரானின் அதிரடி ‘செக்-மேட்’… இனி அனுமதியின்றி ஒரு கப்பல் கூட நுழைய முடியாது… உச்சகட்டப் பதற்றத்தில் வளைகுடா…!

வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் இன்னும் முழுமையாகக் கலைந்துவிடாத நிலையில், ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு…

8 minutes ago

யாரும் சொல்லாத உண்மை… தூங்கும் முன் ஒரு கிளாஸ்… காலையில் அதிசயம்… ஆளி விதை நீரை குடித்தால் உடம்பில் நடக்கும் மேஜிக் இதுதான்…!!!

ஆளி விதை நீர்: தயாரிக்கும் முறையும் ஆரோக்கியத் தொடக்கமும் ஆளி விதைகள் மட்டுமின்றி, அதன் நீரும் உடல் நலத்திற்கு ஒரு…

8 minutes ago