சுமார் 33 ஆண்டுகளுக்கு முன்பு பங்குச்சந்தையில் செய்த மிகச்சிறிய முதலீடு, இன்று ஒரு குடும்பத்தின் தலையெழுத்தையே மாற்றியுள்ள சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 1993-ஆம் ஆண்டு ‘பர்ரோஸ் வெல்கம் இந்தியா’ என்ற நிறுவனத்தின் 20 பங்குகளை, ஒரு நபர் தலா 10 ரூபாய் வீதம் மொத்தம் 200 ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.
காலப்போக்கில் அந்தப் பங்குகளைப் பற்றி அவர் மறந்துவிட்ட நிலையில், சமீபத்தில் வீட்டைச் சுத்தம் செய்தபோது அந்தப் பழைய பங்குச் சான்றிதழ் தற்செயலாகக் கிடைத்துள்ளது. இது லாட்டரி அடித்தது போன்ற ஒரு பெரும் அதிர்ஷ்டமாக அந்த நபரின் குடும்பத்தினருக்கு அமைந்துள்ளது.
கடந்த மூன்று தசாப்தங்களில் அந்த நிறுவனம் ஜிஎஸ்கே (GSK) நிறுவனத்துடன் இணைக்கப்பட்டதுடன், பலமுறை வழங்கப்பட்ட போனஸ் பங்குகள் மற்றும் ஸ்டாக் ஸ்பிளிட் காரணமாக அந்த ரூ.200 முதலீடு இன்று 89,900 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.
இதன் தற்போதைய சந்தை மதிப்பு டிவிடெண்ட் தொகைகளையும் சேர்த்து சுமார் 1.8 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இது போன்ற பழைய காகித வடிவிலான சான்றிதழ்கள் உங்களிடம் இருந்தால், அவற்றை உடனடியாக டிமாட் கணக்கிற்கு மாற்றுவதன் மூலம் எளிதாகப் பணமாக மாற்ற முடியும் என நிதி ஆலோசகர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…