1993-ல் 200 ரூபாய் முதலீடு செய்துவிட்டு மறந்த நபர்…! தற்போது அதன் மதிப்பு எவ்ளோ தெரியுமா…? குடும்பத்தின் தலைவிதியை மாற்றிய சுவாரஸ்ய சம்பவம்….!!

By Devi Ramu on மார்கழி 22, 2025

Spread the love

சுமார் 33 ஆண்டுகளுக்கு முன்பு பங்குச்சந்தையில் செய்த மிகச்சிறிய முதலீடு, இன்று ஒரு குடும்பத்தின் தலையெழுத்தையே மாற்றியுள்ள சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 1993-ஆம் ஆண்டு ‘பர்ரோஸ் வெல்கம் இந்தியா’ என்ற நிறுவனத்தின் 20 பங்குகளை, ஒரு நபர் தலா 10 ரூபாய் வீதம் மொத்தம் 200 ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.

காலப்போக்கில் அந்தப் பங்குகளைப் பற்றி அவர் மறந்துவிட்ட நிலையில், சமீபத்தில் வீட்டைச் சுத்தம் செய்தபோது அந்தப் பழைய பங்குச் சான்றிதழ் தற்செயலாகக் கிடைத்துள்ளது. இது லாட்டரி அடித்தது போன்ற ஒரு பெரும் அதிர்ஷ்டமாக அந்த நபரின் குடும்பத்தினருக்கு அமைந்துள்ளது.

   

கடந்த மூன்று தசாப்தங்களில் அந்த நிறுவனம் ஜிஎஸ்கே (GSK) நிறுவனத்துடன் இணைக்கப்பட்டதுடன், பலமுறை வழங்கப்பட்ட போனஸ் பங்குகள் மற்றும் ஸ்டாக் ஸ்பிளிட் காரணமாக அந்த ரூ.200 முதலீடு இன்று 89,900 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.

   

இதன் தற்போதைய சந்தை மதிப்பு டிவிடெண்ட் தொகைகளையும் சேர்த்து சுமார் 1.8 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இது போன்ற பழைய காகித வடிவிலான சான்றிதழ்கள் உங்களிடம் இருந்தால், அவற்றை உடனடியாக டிமாட்  கணக்கிற்கு மாற்றுவதன் மூலம் எளிதாகப் பணமாக மாற்ற முடியும் என நிதி ஆலோசகர்கள் அறிவுறுத்துகின்றனர்.