முட்டு கொடுக்க முடியாது முதல்வரே..!பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் CM விஜய் மீது.. தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம் கடும் அதிருப்தி..!

Spread the love

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசு அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகக் கூறி, அக்கட்சியின் திருவண்ணாமலை தொகுதி வேட்பாளரும், உழவர் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவருமான அருள் ஆறுமுகம் கட்சியின் தலைமைக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள இந்தத் திட்டம் விவசாயிகளை ஏமாற்றும் வகையில் இருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அருள் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலின் போது விவசாயிகளுக்கு முதலமைச்சர் விஜய் வாக்குறுதி அளிக்கவில்லை, மாறாக ‘உத்தரவாதம்’ கொடுத்தார் என்பதை நினைவூட்டியுள்ளார். தற்போதைய அரைகுறை மற்றும் பாரபட்சமான கடன் தள்ளுபடி அறிவிப்பு என்பது ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் செய்யும் துரோகம் என்றும், இது தவெக மீது மக்கள் வைத்துள்ள ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சீர்குலைத்துவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். சிறு மற்றும் குறு விவசாயிகளின் கடன்களை முழுமையாகவும், நடுத்தர மற்றும் பெரு விவசாயிகளுக்குக் குறைந்தபட்சம் 50% கடனையாவது தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

மேலும், முதலமைச்சர் விஜய்க்கு விவசாயத்தைப் பற்றி முழுமையாகத் தெரியாது என்றும், கள யதார்த்தம் புரியாத ஐஏஎஸ் (IAS) அதிகாரிகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு இதுபோன்ற தவறான முடிவுகளை அரசு எடுக்கக் கூடாது என்றும் சாடியுள்ளார். நிதிப் பற்றாக்குறை இருந்தால், தேர்தல் வாக்குறுதிப்படி ஒட்டுமொத்தத் தள்ளுபடியை முதலில் அறிவித்துவிட்டு, பின்னர் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக நிதியை விடுவித்திருக்கலாம் என்றும், அதை விடுத்து அறிவிக்கப்பட்டுள்ள இந்த அரைகுறை திட்டம் விவசாயிகளிடம் தவெக அரசு மீது பெரும் எதிர்மறை எண்ணத்தையே உருவாக்கும் என்றும் அருள் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

Swetha

Recent Posts

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்.. 61 வயது மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… பயங்கர அதிர்ச்சி..!!

சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: உடனே மூடுங்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

6 மணத்தியாலங்கள் ago

FLASH: அரசு எச்சரிக்கையை மீறி கூடுதல் கட்டணம் வசூல்… டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கைது..!!

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: “சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டத்தின் தொடக்க விழா ரத்து…!!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…

6 மணத்தியாலங்கள் ago

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வீதிமன்றப் போராட்டம்..! புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு.. அரசு ஊழியர்கள் சங்கம் கெடு…!!

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…

7 மணத்தியாலங்கள் ago

அரசியலை கடந்த பாசம்..! சீமான் வீட்டுக்கு அண்ணனாகச் சீர் கொண்டு சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்..! நெகிழ வைக்கும் பின்னணி…!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…

8 மணத்தியாலங்கள் ago