ரெயில்களில் ஏற்படும் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் வழியாக சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரெயில் இரு மார்க்கங்களிலும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் சேலம் கோட்டத்தின் வழியாக இயக்கப்பட உள்ளது.
எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரெயில், இரவு 08.25 மணிக்கு புறப்பட்டு அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு வழியாக மறுநாள் காலை 05.07 மணிக்கு சேலம் வந்தடையும். அங்கிருந்து காலை 05.10 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் அரக்கோணம் வழியாக காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூர் நிலையத்தை சென்றடையும் .
மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 02.10 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில் அரக்கோணம், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வழியாக இரவு 07.22 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர், இங்கிருந்து இரவு 07.25 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை வழியாக மறுநாள் அதிகாலை 03.15 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். இந்த ரெயில் பயணிகளின் வசதிக்காக பெரம்பூர் நிலையத்திலும் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…