“என் தலைவர் மு.க.ஸ்டாலின் தான்!”.. முதலமைச்சர் விஜய் இருக்கைக்குப் பின்னால் நடந்த ‘அந்த’ அரசியல் ட்விஸ்ட்.. நெல்லை மேயர் கொடுத்த அதிரடி விளக்கம்..!!

Spread the love

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மற்றும் துணை மேயருக்குத் தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளில் அமர்ந்துதான் அவர்கள் பொதுமக்களைச் சந்தித்துக் கோரிக்கை மனுக்களைப் பெறுவது, கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவது வழக்கம். தற்போது நெல்லை மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார். இவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில், மேயர் அமரும் முதன்மை இருக்கைக்கு மேலே முன்னாள் முதலமைச்சர்கள் மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

சமீபத்தில் தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்தையும் மேயர் அறையில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே இருந்த கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் புகைப்படங்களுக்கு அருகிலேயே தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் புகைப்படமும் முறைப்படி வைக்கப்பட்டது. ஆனால், புதிய முதலமைச்சரின் புகைப்படம் வைக்கப்பட்ட பிறகு, அதற்கு கீழே இருக்கும் தனது பிரதான மேயர் இருக்கையில் அமர்ந்து பணியாற்றுவதை மேயர் ராமகிருஷ்ணன் திடீரெனத் தவிர்த்து வருகிறார்.

முதன்மை இருக்கைக்குப் பதிலாக, அதே அறையின் மற்றொரு பகுதியில் போடப்பட்டுள்ள சோபாவில் அமர்ந்து கொண்டு, தன்னைச் சந்திக்க வரும் கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களிடம் அவர் மனுக்களைப் பெற்று வருகிறார். அந்த சோபாவுக்கு அருகே தனியாக மேசை மற்றும் நாற்காலிகள் போடப்பட்டு, அதன் மீது முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படம் மற்றும் சிறிய அளவிலான கருணாநிதி சிலையும் வைக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் விஜய் புகைப்படத்தின் கீழ் உள்ள இருக்கையைப் புறக்கணித்துவிட்டு, சோபாவில் அமர்ந்து மேயர் பணியாற்றும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய்ப் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து மேயர் ராமகிருஷ்ணன் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். தன்னை அரசியல் ரீதியாக உருவாக்கிய தனது திமுக தலைவர்களின் படங்களுக்கு அருகிலேயே அமர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற நோக்கில் தான் அங்கு அமர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய முதலமைச்சரின் புகைப்படத்திற்குக் கீழ் அமர்ந்து பணியாற்ற தனக்கு விருப்பம் இல்லை என்பது போன்ற பரப்பப்படும் செய்திகளில் உண்மையில்லை என்றும், இந்த இடமாற்றத்திற்குப் பின்னால் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Muthu Mani

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

4 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

4 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

5 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

5 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

5 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

5 மணத்தியாலங்கள் ago