அம்பாசமுத்திரத்தில் என்ன நடக்கப்போகிறது… சீமான் எடுத்த அந்த ஒரு விபரீத முடிவு… பின்னணியில் இருக்கும் ரகசியம்…!

Spread the love

தமிழ்நாட்டில் விரைவில் 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் இத்தேர்தலிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இந்த இடைத்தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் தொகுதியில் மட்டும் முழுக் கவனத்தையும் செலுத்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டமிட்டுள்ளார். மற்ற தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினாலும், அங்கு தீவிரப் பிரச்சாரத்திலோ அல்லது கூடுதல் கவனத்திலோ ஈடுபடத் தேவையில்லை என கட்சி நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கப்பட்டுள்ளது சீமானின் இந்த வியூகத்தை வெளிப்படுத்துகிறது.

இந்த இடைத்தேர்தல் களம், தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 7 தொகுதிகளிலும் நேரடியாகத் தனது வேட்பாளர்களைக் களம் இறக்கத் தீவிரமாகத் தயாராகி வருகிறது. அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தவர்களுக்குப் பெரும்பாலான தொகுதிகளில் வாய்ப்பளிக்கப்பட உள்ளதாகக் கூறப்படும் நிலையில், திமுகவும் தனது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. விஜய்யின் அரசியல் வருகை மற்றும் எழுச்சி காரணமாக, நாம் தமிழர் கட்சி இந்த முறை கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதுதான் சரியாக இருக்கும் என அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் கருதிய நிலையில், சீமான் மீண்டும் தனித்து களம் காணும் முடிவை அறிவித்துள்ளது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீமானின் இந்தத் தனித்து போட்டியிடும் முடிவுக்குப் பின்னால் ஒரு முக்கியமான அரசியல் அச்சமும் இருப்பதாகக் கூறப்படுகிறது. திமுக போன்ற பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தால், நாதகவின் அடிமட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மொத்தமாக திமுக பக்கம் ஈர்க்கப்பட்டு அக்கட்சியிலேயே ஐக்கியமாகிவிடுவார்களோ என்று சீமான் அஞ்சுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இருப்பினும், சமீபகாலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரைச் சில திருமண நிகழ்ச்சிகளில் சீமான் தனித்தனியாகச் சந்தித்துப் பேசியுள்ளார். இதனால், அவர் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதோ என்ற விவாதங்களும் ஒருபுறம் எழுந்துள்ளன. எது எப்படியாயினும், அதிகாரப்பூர்வ இடைத்தேர்தல் அறிவிப்பு வரும் வரை அமைதி காக்க நாதகவினர் முடிவு செய்துள்ளனர்.

SATHISH R

Recent Posts

ஐயோ… தினமும் அளவுக்கு அதிகமா பால் குடிக்கிறீங்களா…? எச்சரிக்கை… உங்கள் உடலுக்குள் நடக்கும்…. இந்த அதிர்ச்சி உண்மையைத் தெரிஞ்சுக்கோங்க…!!

பாலில் உடலுக்குத் தேவையான கால்சியம், புரதம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், "அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு" என்பதற்கு ஏற்ப…

11 minutes ago

வெடித்த சர்ச்சை…! அடுத்தடுத்து சிக்கும் தவெக அமைச்சர்கள்… ஜனநாயகன் படத்திற்கு குழந்தைகளை அழைத்து வந்த அமைச்சர் ராஜீவ்… குவியும் கண்டனம்…!!

விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்தில் அளவுக்கு அதிகமான வன்முறைக் காட்சிகள் நிறைந்திருப்பதால், தணிக்கைக் குழு இப்படத்திற்கு 'ஏ' (18 வயதுக்கு…

14 minutes ago

“கோஷம் இல்லை… கூச்சல் இல்லை…” ஆனால் இது போராட்டம் தான்… சுட்டெரிக்கும் வெயிலில்… பாடல் பாடி… வன்முறை இல்லாமல் மனதை வென்ற மிசோராம் போராட்டம்… நெகிழவைக்கும் வீடியோ…!

மிசோராமில் நடைபெற்ற அமைதியான போராட்டத்தின் போது, நூற்றுக்கணக்கான சிஜேபி அமைப்பைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் "3 இடியட்ஸ்" திரைப்படத்தின் புகழ்பெற்ற "கிவ்…

14 minutes ago

“அய்யய்யோ… வீதியில் நின்று பேசிய குழந்தைகள் மீது… தீடீரென பாய்ந்த தெருக்காளைகள்…! நெஞ்சை நடுங்க வைக்கும் காட்சி…!!”

சமீபகாலமாக பல பகுதிகளில் வீதிகளில் திரியும் தெருக்காளைகளால் பொதுமக்களும் பள்ளி குழந்தைகளும் பெரிதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில்,…

27 minutes ago

BREAKING: 18 பந்துகளில் அரைசதம் விளாசி அதிரடி… சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி…!!

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச போட்டிகளில் தனது அறிமுக அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தியுள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு…

34 minutes ago