ரஜினிகாந்த் தற்போது தா.செ.ஞானவேல் இயக்கி வரும் “வேட்டையன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் மஞ்சு வாரியர், பகத் பாசில், அமிதாப் பச்சன், துசாரா விஜயன் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
“வேட்டையன்” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தனது 171 ஆவது திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ்ஜுடன் இணையவுள்ளார். இத்திரைப்படம் “The Purge” என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவல் என்று கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.
இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் 173 திரைப்படம் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ரஜினிகாந்தின் 173 ஆவது திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இத்திரைப்படத்தை யார் இயக்கப்போகிறார் என்பது இன்னும் முடிவாகவில்லையாம்.
“தலைவர் 171” திரைப்படத்தை தொடர்ந்து “தலைவர் 172” திரைப்படம் “ஜெயிலர் பார்ட் 2” ஆக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. “தலைவர் 172” திரைப்படத்தை தொடர்ந்து “தலைவர் 173” திரைப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளிவருகிறது. அதே போல் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் ஒரு திரைப்படத்திலும் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு ஓய்வே இல்லாமல் ரஜினிகாந்த் தொடர்ந்து கமிட் ஆகி வருகிறாராம்.
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…
கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…