தமிழ் சினிமாவின் சின்ன கலைவாணர் விவேக்கின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடிகர் செல் முருகன் செய்திருக்கும் செயல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மறைந்த காமெடி நடிகர் விவேக்கை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. தன்னுடைய ஒவ்வொரு காமெடி மூலமும் ரசிகர்களை சிரிக்க வைத்தது மட்டும் இன்றி சிந்திக்கவும் வைத்தவர்.
நடிகர் விவேக் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு டப்பிங் மொழி படங்களிலும் நடித்துள்ளார். நடிப்பைத் தாண்டி மிகவும் பிரபலமான குளிர்பானமாக இருந்த மிராண்டா மற்றும் பிரபல நகை நிறுவனம் ஒன்றிலும் பிராண்ட் அம்பாசிடராக நடிகர் விவேக் இருந்துள்ளார். இவர் தமிழ் ,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் இருக்கிறார். அதிலும் இவர் மறைந்த அப்துல்கலாமின் தீவிர ரசிகர். அவர் மீது கொண்ட பற்றின் காரணமாக இவர் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார். அதுமட்டும் இல்லாமல் 1 கோடி மரங்களை நடுவது தான் இவரின் கனவாக இருந்தது.
அதற்குள் 2021 ஏப்ரல் 17 ஆம் தேதி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.
விவேக்கின் இறப்பு பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தினாலும் நடிகர் செல் முருகனுக்கு இது ஈடு செய்ய முடியாத இழப்பு தான். செல் முருகன் 26 ஆண்டுகளாக விவேக்குடன் இருக்கிறார். விவேக் படங்களில் நிச்சயம் செல் முருகன் இடம்பெற்று விடுவார். சினிமாவை தாண்டி இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். அதோடு விவேக்கின் இறப்பிற்கு பின்னரும் விவேக்கை மறக்காமல் தொடர்ந்து பல பதிவுகளை பதிவிட்டு வருகிறார் செல்முருகன்.
இந்நிலையில் இன்று மறைந்த நடிகர் சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம். இதையொட்டி அவரின் நெருங்கிய நண்பரான செல் முருகன், நடிகர் வைபவின் 27 வது படமான ‘வைபவ் 27’ படக்குழுவில் ஒவ்வொரு கலைஞர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கியுள்ளார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த பலரும் செல் முருகனுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் பாராட்டியும் வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..
தமிழகத்தில் பிரபல youtube-ராக வலம் வரும் இர்ஃபான் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்ததால் சுகாதாரத்துறை அவர்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விருந்தினராக அபுதாபியில் உள்ள லூலூ நிறுவனத்தின் ஓனர் எம். எஃப் யூசப் அலி வீட்டிற்கு சென்றிருந்த…
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. தமிழில் சன்…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல்…
தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அவருக்கென வெறித்தனமான லட்சக் கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.…
தமிழ் சினிமாவில் இருக்கும் திறமை மிகு நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். தன்னுடைய ஒரு வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார்.…