#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்பொழுது லியோ திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தையும் வசூலில் சாதனையும் படைத்தது. இதை தொடர்ந்து GOAT திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகன் உள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
இவர் சினிமா துறை சார்ந்த படிப்பை கடந்த ஆண்டு முடித்தார். இதை தொடர்ந்து அவர் சினிமாவில் விரைவில் காலடி எடுத்து வைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தனது தந்தையைப் போல ஹீரோவாக அல்லாமல் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். ஏற்கனவே ஒரு சில குறும்படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் சஞ்சய் ‘புல் தி டிரிக்கர்’ என்கிற குறும்படத்தை இயக்கியிருந்தார். இந்த குறும்படம் யூடியூபில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், லைகா நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது லைகா நிறுவனம். மேலும் நடிகர் கவினை வைத்து தனது முதலாவது திரைப்படத்தை ஜேசன் இயக்குவார் என்று ஒரு சில தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியும் வருகின்றன.
இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் திரைபைரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இத்திருமண புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. முன்னதாக இத்திருமண விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜயின் மனைவி சங்கீதா அவர்களின் புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டது. மேலும் இத்திருமணவிழாவில் தளபதியின் மகனும் கலந்து கொண்டுள்ளாராம். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘அப்பா வரலைன்னா என்ன மகன் வந்துருக்காரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகர் விஜய் GOAT படத்தின் ஷூட்டிங்கிற்காக வெளிநாட்டில் இருப்பதால் திருமண விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…
LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை…
பெண்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டிய சமூக ஊடக வெளியில், சக பெண்ணையே ஆடை மற்றும் கண்ணியம் என்ற பெயரில்…
இந்தியாவில் தனியார் பள்ளிக் கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வருவது குறித்த விவாதத்தை இந்தச் செய்தி கிளப்பியுள்ளது. சமூக…
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஒரு குரங்கு, மூன்று மாதக் குழந்தையைத் தனது குட்டி என நினைத்து நீண்ட நேரம்…
கான்பூரைச் சேர்ந்த 45 வயதான சசி ரஞ்சன் மிஸ்ரா என்பவர், தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கொடூரமாகக்…