ரூ.15,000 கோடி காலி… நிதித்துறை கொடுத்த பகீர் ரிப்போர்ட்…. டாஸ்மாக் இழப்பை ஈடுகட்ட அரசு எடுக்கப்போகும் ‘ரூட்’ இதுதான்….!

Spread the love

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற இரண்டாவது நாformatளிலேயே, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற அதிரடி உத்தரவு ஒன்றை விஜய் பிறப்பித்துள்ளார். மாநிலத்தில் மொத்தம் உள்ள 4,765 டாஸ்மாக் கடைகளில், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் (500 மீட்டர் தொலைவிற்குள்) அமைந்துள்ள 717 கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட வேண்டும் என்பதே அந்த உத்தரவாகும். இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றிருந்தாலும், ஏற்கனவே 10 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி கடன் சுமையில் தத்தளித்து வரும் தமிழக அரசுக்கு இது நிதி ரீதியாகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

தமிழக அரசின் முக்கிய வருவாய் ஆதாரங்களாகத் திகழ்வது டாஸ்மாக் மது விற்பனையும், பத்திரப்பதிவுத் துறையும் ஆகும். கடந்த 2025-26ஆம் நிதியாண்டில் இந்த இரண்டு துறைகளும் இணைந்து ரூ.75,000 கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளன. இதில் பத்திரப்பதிவுத் துறை மூலம் ரூ.25,500 கோடியும், டாஸ்மாக் மது விற்பனை மூலம் மட்டுமே சிம்ம சொப்பனமாக ரூ.50,000 கோடியும் வருவாயாகக் கிடைத்துள்ளது. தற்போதைய சூழலில் கஜானா காலியாக இருப்பதாகக் கூறி, தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கால அவகாசம் கேட்டுள்ள புதிய அரசுக்கு, இந்த மதுக்கடைகள் மூடல் மேலும் ஒரு நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு குறித்த பரபரப்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. மாநில நிதித் துறையின் முன்னாள் தலைமை கணக்காய்வாளர் ஏ. மோகன் இதுகுறித்து கூறுகையில், இந்த அதிரடி நடவடிக்கையால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.15,000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளார். இந்த மிகப்பெரிய தொகையானது மாநிலத்தின் கட்டமைப்பு மற்றும் மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் தொய்வை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலையையும் பொருளாதார வல்லுநர்கள் எழுப்புகின்றனர்.

இருப்பினும், இந்த ரூ.15,000 கோடி வருவாய் இழப்பை ஈடுகட்ட அரசு மாற்று வழிகளை ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்குத் தீர்வாக, மதுபானங்களுக்கான கலால் வரி மற்றும் வாட் (VAT) வரியை உயர்த்துவது, வருவாய் இழப்பைச் சரிசெய்ய பிரீமியம் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்களை விற்கும் ‘எலைட்’ (Elite) கடைகளை விரிவுபடுத்துவது போன்ற திட்டங்களை அரசு கையில் எடுக்கலாம். மேலும், கூடுதல் வருவாய் ஆதாரமாக ஆன்லைன் மதுபான விற்பனையை முறைப்படுத்தி அறிமுகப்படுத்துவது குறித்தும் புதிய அரசு ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

Nanthini

Recent Posts

BREAKING: உணவகத்தில் ஏசி வெடித்து விபத்து… 1 லட்சம் நிதியுதவி அறிவித்தார் CM விஜய்..!!

தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…

2 minutes ago

“லேட்டா வந்தா அவ்ளோதான்”.. முதலமைச்சர் விஜய்யின் ‘பங்ச்சுவாலிட்டி’ உத்தரவால் பரபரப்பு.. தலைமைச் செயலகத்தில் அதிரடி மாற்றம்..!!

தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…

25 minutes ago

நீதி எங்கே போகிறது? சிறையில் இருந்து வந்த பாலியல் கைதிக்கு ஹீரோ ரேஞ்சுக்கு வரவேற்பு அளித்த ஆதரவாளர்கள்: வைரல் வீடியோவால் கொதிக்கும் நெட்டிசன்கள்..!

உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…

35 minutes ago

தினமும் பெட்ரோல் குடிக்கும் பெண்… “இது இல்லைனா எனக்கு தூக்கமே வராது” என அதிர வைக்கும் இளம்பெண்ணின் பகீர் போதை.!!

கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…

36 minutes ago

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்திருக்கீங்களா..? முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு… செம குட் நியூஸ்..!!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்காகக் காத்திருக்கும் பொதுமக்களுக்கு மிக விரைவில் கார்டுகள் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என…

37 minutes ago

“தேவைப்பட்டால் தெருநாய்களை கருணைக்கொலை செய்யலாம்” உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் பரப்பரப்பு..!!

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் பெருக்கம் மற்றும் பொதுமக்களை அவை கடிக்கும் சம்பவங்கள் தொடர்பான வழக்கை விசாரித்த…

41 minutes ago