சென்னையில் பேருந்து போக்குவரத்து, மின்சார போக்கு ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில் போக்குவரத்து என உள்ளூர் போக்குவரத்து வசதிகள் ஏராளமாக இருந்தாலும் பெரும்பாலான பயணிகள் பயன்படுத்தும் எளிமையான போக்குவரத்து பேருந்தாக தான் இருக்கிறது. இதனால் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக 27 பணிமனைகளில் இருந்து தினமும் 3,233 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் தினசரி சுமார் 40 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். பெரும்பாலும் மாநகர பேருந்துகளில் கூட்டம் அலைமோதும். அதிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் என பேருந்துகளில் செல்வதால் கடுமையான அளவு கூட்டம் காணப்படும்.
பெண் பயணிகள் அதிகமாக பயணம் செய்யும் வழித்தடங்களில் மகளிர் மட்டும் பயணிக்கும் விதமாக 50 மகளிர் சிறப்பு பேருந்துகளை இயக்கலாம் என்று ஆலோசனை செய்து வருகிறது. இதே போன்று மாணவ, மாணவிகள் பேருந்துகளில் இருக்கையில் அமர்ந்தபடி பயணிப்பது உறுதி செய்ய அவர்களுக்கென்று தனியாக 50 சிறப்பு பேருந்து சேவை இயக்கவும் உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக சுமார் 25 கல்வி நிறுவனங்களை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தேர்வு செய்துள்ளது. சுமார் நான்கு கல்லூரிகள் அடங்குவதோடு பெரும்பாலான பள்ளிகள் பெண்கள் மட்டும் பயிலும் மேல்நிலைப் பள்ளிகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்தும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பேருந்து சேவை குறித்தும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தமிழக அரசுக்கு பரிசீலனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…