Categories: சினிமா

தமிழ் சினிமாவுக்கு மோசமான ஆண்டாக அமைந்த 2024.. மொத்தம் இத்தனை படங்கள் பிளாப்பா?.. இப்படி ஒரு சோதனை காலமா..?

Spread the love

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் வாரத்திற்கு நான்கு திரைப்படங்கள் ஆவது திரையரங்குகளில் வெளியாகி விடுகின்றன. அதனால் சராசரியாக ஆண்டுக்கு 200 திரைப்படங்கள் ஆவது வெளியாகிறது. இந்த திரைப்படங்களின் வெற்றி தோல்வி தான் தமிழ் சினிமாவின் வளர்ச்சியை நிர்ணயம் செய்கின்றது. இந்த நிலையில் கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் ரிலீசான படங்கள் ஏராளமானவை பெரும் தோல்வியை சந்தித்துள்ளன. தமிழ் சினிமாவில் கடந்த 2024 ஆம் ஆண்டு அமரன், மகாராஜா மற்றும் கருடன் போன்ற பல படங்கள் வெற்றி பெற்றிருந்தாலும் தமிழ் சினிமாவுக்கு மிகவும் ஏமாற்றமான ஆண்டாக 2024 அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

2024 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சுமார் 3000 கோடியை படங்களில் முதலீடு செய்து செலவிட்டனர். ஆனால் இறுதியில் அவர்கள் சுமார் 1000 கோடி நஷ்டத்தை தான் அடைந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் தமிழில் வெளியான 241 படங்களில் சுமார் 18 திரைப்படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன. மீதமுள்ள 223 படங்கள் தோல்வி அடைந்தன. 2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என்று கோலிவுட் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆயிரம் கோடி அளவில் நஷ்டம் அடைவதற்கு ஒரு முக்கிய காரணம் பெரிய ஹீரோக்களின் படங்கள் மக்களிடம் சொதப்பியதுதான். கமல்,ரஜினி மற்றும் சூர்யா போன்ற பெரிய நட்சத்திரங்கள் நடித்த பெரிய பட்ஜெட் படங்கள் எதிர்பார்க்காத விதமாக பெரும் தோல்வியை சந்தித்தனர். சூர்யாவின் கங்குவா திரைப்படம் 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் ஆயிரம் கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 106 கோடி மட்டுமே வசூல் செய்தது. அதனைப் போலவே சங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் 2 திரைப்படம் 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.

ஆனால் இந்த படம் வெறும் 150 கோடி மட்டுமே வசூல் செய்தது. அதனைப் போலவே ரஜினியின் வேட்டையன் உள்ளிட்ட பல பெரிய படங்களை பார்வையாளர்கள் விமர்சித்து படத்தை புறக்கணித்த நிலையில் வசூலில் பெரும் அடி வாங்கியது. விஜயின் கோட் திரைப்படம் மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.

2024 ஆம் ஆண்டில் கருடன், லப்பர் பந்து, டிமான்டி காலனி 2, வாழை போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை தந்தன. இப்போது வெளியாக கூடிய படங்கள் எல்லாம் கதையின் தாக்கத்தால் மக்கள் மத்தியில் வரவேற்பு பெறுகின்றன. சமீபத்தில் கூட விஷால் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஒரு கோடியில் இருந்து நான்கு கோடி ரூபாய் வரை படம் எடுக்க நினைப்பவர்கள் தயவு செய்து அந்த பணத்தை வங்கியில் பிக்சட் டெபாசிட்டில் போட்டு வையுங்கள். அந்த அளவுக்கு தமிழ் சினிமா மோசமான நிலையில் இருக்கிறது என்று பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

“செம சூப்பர் பாஸ்”… சங்கீதா மீதான காதலை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட தளபதி விஜய்… இணையத்தை அதிரவைக்கும் பழைய பேட்டி…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்க்கும், சங்கீதாவுக்கும் கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள…

6 minutes ago

நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு செக்…! இனி சமரச பேச்சுக்கு இடமில்லை…. உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் தவெக ஆட்சியில் நிதியமைச்சராக இருக்கும் மரிய வில்சனுக்கும், புதுச்சேரியில் வசிக்கும் அவரது தம்பி மரிய கிளோத்துக்கம் இடையே நீண்டநாட்களாகச்…

6 minutes ago

என்ன தைரியம் இருந்தா… என் பொண்ணு மேல கையை வைப்ப?… உணவகத்தில் தவறாகப் புரிந்து… முதியவரைத் தாக்கிய தந்தை… பதறவைக்கும் சிசிடிவி காட்சி…!

சிங்கப்பூர் உணவகத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், மனித உறவுகளின் சிக்கலையும் அவசர முடிவுகளின் ஆபத்தையும் வெளிப்படுத்துகிறது. சிறுமியின் தலைமீது முதியவர்…

8 minutes ago

ஐயோ காப்பாத்துங்க… வெந்திரா கால்வாயில் நீந்தச் சென்ற… 5 மாணவர்கள் அடித்துச் செல்லப்பட்டு… 2 பேர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடந்த ஐத்தம்புடி கால்வாய் சோகத்தின் சுவடுகள் மறைவதற்குள்ளேயே, பாலக்கோடேரு மண்டலம் வெந்திரா கிராமத்தில் மற்றுமொரு கொடூர…

11 minutes ago

மேடம்… 2 நிமிஷம் இருங்க… நள்ளிரவில் ஆள்நடமாட்டமில்லாத சாலையில் காரை நிறுத்திய ஓட்டுநர்… அடுத்த நடந்த ஷாக்கிங் சம்பவம்…!

மும்பையின் இரயில் நிலையத்திலிருந்து நள்ளிரவில் வெளியேறிய ஒரு இளம் பெண், தனது வீட்டிற்குச் செல்ல ஒரு டேக்சிக்காகக் காத்திருந்தாள். டேக்சி…

29 minutes ago

“ஐயோ… என் புருஷனை ஆளையே காணோம் சார்… அலமாரியில் ரத்தக் கறை… நள்ளிரவில் அலறல் சத்தம்… கிராமத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்…!”

அண்டை கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி முழுவதையும் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்த…

32 minutes ago