Connect with us

CINEMA

“அமீரை அசிங்கப்படுத்தினால் சூர்யாவின் கால்ஷூட்”.. அடுத்த பரபரப்பை கிளப்பிய பிரபலம்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழும் அமீரின் பருத்திவீரன் பட விவகாரம் கடந்த சில வாரங்களாக கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படத்தை அமீர் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இயக்கிய தயாரித்துள்ளார். ஆனால் அவருக்கு தர வேண்டிய பணத்தை கொடுக்காமல் ஞானவேல் ராஜா பருத்திவீரன் திரைப்படத்தின் உரிமையை ஏமாற்றி எழுதி வாங்கியுள்ளார். இதனால் நீதிமன்றத்தில் அமீர் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கு 16 ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் உள்ளது. சமீபத்தில் அமீர் மற்றும் ஞானவேல் ராஜா இருவரும் கொடுத்த பேட்டிகளும் வெளியிட்ட அறிக்கைகளும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

   

இந்த விவகாரத்தில் அமீருக்கு சாதகமாக சசிகுமார், சமுத்திரக்கனி, பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இதனால் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இருந்தாலும் இந்த பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை. மற்றொரு பக்கம் வாடிவாசல் திரைப்படத்தில் அமீர் கட்டாயம் நடிப்பார் என வெற்றிமாறன் உறுதியாக கூறியுள்ள நிலையில் இந்த படத்தில் சூர்யாவும் நடிக்க உள்ளார். இதில் அமீர் நடித்தால் சூர்யா அதிலிருந்து விலகி விடுவார் என்று செய்தி வெளியானது.

இருந்தாலும் அதற்கு வாய்ப்பில்லை எனவும் சூர்யா, வெற்றிமாறன் மற்றும் அமீர் கூட்டணியில் வாடிவாசல் திரைப்படம் உருவாகும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சூர்யா அமீரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பதாக வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், பருத்திவீரன் விவகாரத்தில் இயக்குனர் அமீரை அசிங்கப்படுத்தி அமைதியாக்கினால் சூர்யாவின் கால் சூட் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறதா? சிலர் தீயாய் இறங்கி வேலை செய்கிறார்களே என கொளுத்தி போட்டுள்ளார். பருத்திவீரன் சர்ச்சையில் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வரும் நிலையில் தற்போது இந்த பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 

author avatar
Nanthini
Continue Reading

More in CINEMA

To Top