Categories: சினிமா

மகளுக்காக குஷ்பு தேர்ந்தெடுத்த பேர்… அதப் போய் ஹீரோயினுக்கு வச்சதால் சுந்தர் சி குடும்பத்தில் வந்த சண்டை!

Spread the love

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், வின்னர், கிரி, கலகலப்பு என ஏராளமான படங்கள் கமர்ஷியலாக பெருவெற்றி பெற்றுள்ளன. முறைமாமன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சுந்தர் சி காமெடி, கிளாமர், ஆக்‌ஷன் என கலந்து கட்டி மசாலா படமாக எடுத்து முன்னணி இயக்குனர் ஆனார்.

சுந்தர் சி படத்துக்கு சென்றால் வாய்விட்டு சிரித்து ரசித்துவிட்டு வரலாம் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். அதற்கேற்றார் போல சுந்தர் சி படங்கள் சுமாராக் இருந்தாலும் காமெடி கட்டாயம் ஹிட்டாகிவிடும். அவர் இயக்கத்தில் கவுண்டமணி, விவேக், வடிவேலு, சந்தான, சூரி மற்றும் யோகி பாபு என அனைத்து முன்னணி நகைச்சுவை நடிகர்களும் நடித்துள்ளனர்.

சுந்தர் சியின் படங்களைப் போலவே அவர் தரும் நேர்காணல்களும் நான் ஸ்டாப் காமெடியாக அமையும். அப்படி சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் அவர் இயக்கிய உன்னை தேடி திரைப்படத்தின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் இந்த படத்தை இயக்கும் போது என் மனைவி கர்ப்பமாக இருந்தார். அவர் மகள் பிறந்தால் என்ன பெயர் வைக்க வேண்டும் என யோசித்து ‘மாளவிகா’ என்ற பெயரை தேர்ந்தெடுத்தார்.

அன்றைக்கு நான் கம்போசிங்குக்காக தேவா சாரோடு இருந்தேன். அப்போது ட்யூன் போட்டுக் கொண்டிருக்கும் போது ‘எதாவது ஒரு பேர் சொல்லுங்க சார்’ என்றார். நான் அப்போது திடீரென்று மாளவிகா என்று சொல்லிவிட்டேன். அந்த வார்த்தையும் ட்யுனுக்குள் உட்கார்ந்து விட்டது. அதனால் அந்த படத்தின் கதாநாயகிக்கும் மாளவிகா என்று பெயர் வைத்துவிட்டோம். அந்த பெயரையே ஸ்வேதாவும் தனக்கு வைத்துக்கொண்டு வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தார்.

நான் என் குழந்தைக்காக தேர்வு செய்த பெயரை உன் படத்துக்கு பயன்படுத்திகிட்டியே என என் மனைவி என்னிடம் சண்டை போட்டார்” என ஜாலியாக பகிர்ந்துள்ளார்.

vinoth

Recent Posts

என் புருஷனே விட்டுட்டு போயிட்டாரு… மூன்று பிஞ்சுகளை துடிதுடிக்க கொன்று… தாய் எடுத்த விபரீத முடிவு… நடுங்க வைக்கும் அந்த ஒரு சம்பவம்…!

பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…

2 minutes ago

வைரல் வீடியோ: செய்தியாளர்களைப் பார்த்து நடுவிரலைக் காட்டிய வருங்கால மனைவி… இந்தியாவையே உலுக்கும் காட்சிகள்…. பின்னணியில் இருக்கும் திகிலூட்டும் ரகசியம்…!

இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…

9 minutes ago

தவெக அமைச்சர் சிக்கினார்… கோர்ட் அதிரடி உத்தரவு… அடுத்த பரபரப்பு…!

தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…

17 minutes ago

Breaking: சிங்கப்பூர் ஹாஸ்பிடலில் எ.வ.. வேலு அனுமதி… சற்று முன் பரபரப்பு…!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

24 minutes ago

இதுதான் காதலின் உச்சமா?… உலகப் புகழ்பெற்ற நியூயார்க் கோபுரத்தில் காதலர்களின் முத்த மழை… உலகத்தையே கதி கலங்க வைத்த சாகசம்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…

1 மணத்தியாலம் ago

அப்படி போடு… பெரம்பூர் மக்களே ரெடியா?… புகார் கொடுத்த சில நொடிக்ளிலயே தீர்வு… மக்களுக்காக அதிரடி முடிவெடுத்த முதல்வர் விஜய்… பெரம்பூர் தொகுதிக்கு வந்த புதிய அதிரடி மாற்றம்…!

சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…

1 மணத்தியாலம் ago