#image_title
தமிழ் சினிமாவில் கவுண்டமணி 2.0 வெர்ஷனாக வந்து கலக்கியவர் சந்தானம். லொள்ளு சபாவில் நடித்துக் கொண்டிருந்த சந்தானத்தை சினிமாவுக்கு அழைத்து வந்த பெருமை சிம்புவையும் டி ஆரையுமே சேரும். தொடர்ந்து சிம்பு சந்தானத்தை மன்மதன் மற்றும் வல்லவன் என அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பளித்தார்.
அதன் பின்னர் சந்தானம் பல படங்களில் நடித்தாலும், அவரை முன்னணி நகைச்சுவை நடிகராக்கியது சிவா மனசுல சக்தி திரைப்படம். அந்த படத்தில் அவரின் நகைச்சுவை காட்சிகள் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தன. அதன் பின்னர் அவர் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன், கலகலப்பு, கண்ணா லட்டு திண்ண ஆசையா ஆகிய படங்கள் அவரை நம்பர் 1 காமெடி நடிகராக்கின.
இதனால் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆனார். பல படங்கள் அவரின் கால்ஷீட்டுக்காக காத்திருந்தன. இந்நிலையில் சந்தானத்தோடு நிறைய படங்களில் இணைந்து நடித்துள்ள சுந்தர் சி அவரின் வளர்ச்சி பற்றி ஒரு சுவாரஸ்ய சம்பவத்தைப் பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர் “நானும் சந்தானமும் இணைந்து ஒரு படத்தில் இணைந்து நடித்தோம். அப்போது சந்தானம் வளர்ந்து வரும் நடிகர்தான். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓரமாக உட்கார்ந்திருந்தார். நான் அவரிடம் என்ன சந்தானம் ஷூட் முடிஞ்சுச்சா எனக் கேட்டேன். இல்ல சார் காலைல உக்காந்திருக்கேன். இன்னும் ஒரு ஷாட் கூட எனக்கு எடுக்கல என்றார்.
நான் அந்த இயக்குனர் பாருங்க ஒரு நாள் சந்தானம் கால்ஷீட் கெடைக்காம அலையப் போறீங்க என வேடிக்கையாக சொன்னேன். ஆனால் என் வாய் முகூர்த்தம் அப்படியே பலித்தது. நானும் சந்தானமும் சில ஆண்டுகள் கழித்து ஒரு படத்தில் நடிக்கும்போது சந்தானத்திடம் அந்த இயக்குனர் கால்ஷீட் கேட்க வந்தார்.
அப்போது சந்தானம் என்னிடம் “சார் நீங்க அன்னைக்கு வெளையாட்டா சொன்னீங்க. அது இப்ப நடக்குது. நானும் எவ்வளவோ ட்ரை பண்றேன். அவருக்கு என்னால் ஒரு நாள் கால்ஷீட் கூட என்னால் கொடுக்க முடியவில்லை. நீங்கள் சொன்னது நடந்து விடக் கூடாது என நானும் பார்க்கிறேன்எனக் கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…