Categories: சினிமா

தலகீழ நின்னு தண்ணீ குடிச்சாலும் தமிழ் சினிமாவில் இதெல்லாம் மாறாது.. எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 கிளிஷே சீன்கள்..

Spread the love

எழுத்தாளர் சுஜாதா தமிழ் சினிமாவில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் திரைக்கதை வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார். அதில் மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்டவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பணியாற்றினாலும் அவருக்கு அந்த துறை மேல் கடுமையான விமர்சனமும் அதிருப்தியும் இருந்தது. அதை அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக தமிழ் சினிமாவில் அரைத்த மாவையே அரைத்து வைக்கப்படும் கிளிஷேவான காட்சிகள் குறித்து ஒருமுறை அவர் சொன்னது குறிப்பிடத்த்க்கது.  இந்நிலையில் இந்த பதிவில் அவர் தமிழ் சினிமாவில் மாறவே மாறாது என சொன்ன 20 விஷயங்கள் பற்றி சொன்னதை பார்ப்போம்.

சுஜாதா சொன்ன 20 விஷயங்கள்

 

1. இரட்டை வேடத்தில் எப்போதுமே ஒருவர் கெட்டவர்.

  1. பாம் வெடிப்பதைத் தடுக்க ஹீரோ எந்த ஒயரை வேண்டுமானாலும் கட் பண்ணலாம். வெடிக்காது.
  2. எத்தனை பேர் ஹீரோவைத் தாக்க வந்தாலும், ஒரு ஒருவராக வந்துதான் உதைபடுவார்கள்.
  3. இரவு நேரத்தில் எல்லா விளக்குகளையும் அணைத்த பின்பும் வீடு முழுதும் ஊதா கலரில் தெரியும்.
  4. நேர்மையான போலீஸ் அதிகாரியைக் காட்டினால் நிச்சயமாக அவர் கொல்லப்படுவார்.
  5. வில்லன் ஹீரோவை நேராக சுட்டோ, கத்தியால் குத்தியோ கொல்ல மாட்டார். ஹீரோ தப்பிக்க முப்பது நிமிடமாவது இருக்கும்படி சுற்றி வளைத்துதான் கொல்ல முயற்சிப்பான்.
  6. ஹீரோ வில்லனிடம் செமயாக அடி வாங்கும்போது வலிக்கவே வலிக்காது. ஆனால், ஹீரோயின் பஞ்சு ஒத்தடம் கொடுக்கும்போது மட்டும் ஸ்…. ஸ்… ஆ என்பான்.
  7. ஒரு பெரிய கட்டடத்தின் ஜன்னல் கண்ணாடியைக் காட்டினால் அதை உடைத்துக் கொண்டு யாராவது விழுவார்.
  8. ஹீரோவோ ஹீரோயினோ ரோட்டில் நடனமாடத் துவங்கினால் தெருவில் போகும் அனைவரும் அதே தாளத்தில் ஒரே மாதிரி நடனமாடுவார்கள்.
  9. போலீஸ் உயர் அதிகாரி நல்லவர் என்றால் கீழே இருக்கும் போலீஸ்காரர்கள் கெட்டவர்களாக இருப்பர். உயர் அதிகாரி கெட்டவர் என்றால் இவர்கள் நல்லவர்கள்

11. உணர்ச்சி வசப்படும் காட்சிகளில் திடீரென மின்னல் வெட்டி மழை வந்தே ஆக வேண்டும்.

  1. பாடல் காட்சிகளில் ஒரு வரி மயிலாப்பூரிலும், அடுத்த வரி ஐரோப்பாவிலும், அடுத்த வரி மலேசியாவிலும் பாடப்படும்.
  2. ஒரே பாட்டு பாடிக்கொண்டிருக்கையில் உடை மாறும், உடையின் நிறம் மாறும்.
  3. சட்டென்று எல்லா மியூசிக்கும் நின்று விட்டால் யாரோ செத்துப் போய்விட்டார்கள் என்று அர்த்தம்.
  4. கோர்ட்டில் யார் வேண்டுமானாலும் வழக்கின் எந்தக் கட்டத்திலும் நுழைந்து, உடனே சாட்சி சொல்லலாம். கோர்ட் வாசற்படியில் நின்றுகூட சாட்சி சொல்லலாம்.
  5. முகூர்த்தத்துக்கு நேரமாறது, பொண்ண வரச்சொல்லுங்கோ’ என சாஸ்திரிகள் அவசரப்படுத்தினால், பெண் காணாமல் போய் விட்டாள் என எதிர்பார்க்கலாம்.
  6. கல்யாண காட்சியில் தாலியைக் கட்டப்போகும் சமயம், ‘நிறுத்துங்க”’ என்ற குரல் எப்படியும் ஒலித்தே தீரும்.
  7. ஹீரோ ஏழை என்றால் பணக்கார பெண்ணையும், பணக்காரன் என்றால் ஏழைப் பெண்ணையுமே காதலிப்பான்.
  8. வில்லன் என்றாலே நிச்சயம் ஏதாவது கள்ளக்கடத்தல் செய்வான்.
  9. ஹீரோ முதல் பாதி கிராமத்திலிருந்தால் இரண்டாம் பாதி நகரத்திற்கு வருவார்.
vinoth

Recent Posts

காலையிலேயே குட் நியூஸ்.. கடன் முழுவதும் தள்ளுபடி.. தமிழக மக்களுக்கு CM விஜய் இன்ப அதிர்ச்சி…!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி,…

4 minutes ago

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட்… இனி எந்த கடையிலும் பொருட்கள் வாங்கலாம்… ஏடிஎம் போல மாறும் சிஸ்டம்… மத்திய அரசின் அதிரடி அப்டேட்…!!

மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்கள் இனி தங்களுக்குரிய உணவுப் பொருட்களைப்…

5 minutes ago

கணவனே எமன்…. அன்னூர் கிணற்றில் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்…. 4 நாளில் வெளியான பகீர் உண்மை….!

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள ராசிபுரம் பகுதியில், மூடப்பட்டுக் கிடக்கும் தனியாருக்குச் சொந்தமான…

8 minutes ago

எல்பிஜி சிலிண்டர் பயனர்களுக்கு அதிர்ச்சி… ஜூன் 30-க்குப் பிறகு கனெக்ஷன் கட்…? மத்திய அரசின் நியூ அப்டேட்…!!

இந்தியாவில் சமையல் எரிவாயு அத்தியாவசிய தேவையாக உள்ள நிலையில், ஒரே வீட்டில் பைப்லைன் மூலமாக வரும் PNG கேஸ் மற்றும்…

11 minutes ago

காலையிலேயே பரபரப்பு… இனி தவெக-வும் இல்ல, அதிமுக-வும் இல்ல…. சி.விஜயபாஸ்கரின் ‘ஸ்கெட்ச்’… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப்…

13 minutes ago

“அந்த ஒரு ரகசிய அறை.. பகலில் வீடு.. இரவில் விபச்சார விடுதி”…. 27 வயது இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்…. திருச்சூரில் நடுங்க வைக்கும் உண்மை….!

கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த…

16 minutes ago