தமிழ் சினிமாவில் 50 களில் இருந்து 77 வரை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால்தான் அரசியலுக்கு வந்தபோதும் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருந்தார்.
பல வருட போராட்டத்துக்குப் பிறகு எம் ஜி ஆர் ஹீரோவானதும் , அதன் பிறகு பெரும்புகழ் பெற்றதும் உலகறிந்த வரலாறு. அவரின் வளர்ச்சிக்கு அவர் திமுகவில் இருந்ததும் ஒரு காரணம். அதுபோல அவரின் திரையுலக வெற்றி திமுகவுக்கும் பயன்பட்டது. கடவுள் பக்தராக இருந்தாலும் திமுகவில் இருந்ததால் எம் ஜி ஆர் வெளிப்படையாக கோயில்களுக்கு செல்ல மாட்டார். ஆனால் அவர் வீட்டில் அவர் பூஜை செய்வதுண்டு.
எம் ஜி ஆர் வளர்ந்து சூப்பர் ஸ்டார் நடிகர் ஆனதும், அதன் பின்னர் அவருடைய படங்களில் எல்லாவற்றையும் அவர் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வார். அதுதான் பின்னர் அவரின் அரசியலின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. எம் ஜி ஆர் ஒரு கட்டத்தில் தன்னுடைய உருவத் தோற்றத்தை வித்தியாசமாக மாற்றிக் கொண்டார்.
அதில் ஒன்றுதான் பின்னாளில் அவரின் அடையாளமாகவே ஆன கருப்புக் கண்ணாடி. ஒரு கட்டத்துக்குப் பிறகு எம் ஜி ஆர் எங்கு வெளிவந்தாலும் கருப்புக் கண்ணாடிதான். இதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளதாக நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.
அதில் “எம் ஜி ஆரின் கண்கள் மிகவும் எக்ஸ்பிரஸிவ்வான கண்கள். அதனால் ஒரு ஜோதிடர் அவரிடம் சொன்னாராம். இந்த கண்களால் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்பதை எதிரில் இருப்பவர்கள் தெரிந்துகொள்ளக் கூடாது. அதனால் கருப்புக் கண்ணாடி போட்டுக் கொள்ளுங்கள் என சொன்னதாக அந்த கருப்புக் கண்ணாடிக்குப் பின்னால் ஒரு கதை சொல்வார்கள்” என்று கூறியுள்ளார்.
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…
திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…
ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…