தமிழ் சினிமாவில் 50 களில் இருந்து 77 வரை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால்தான் அரசியலுக்கு வந்தபோதும் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருந்தார்.
பல வருட போராட்டத்துக்குப் பிறகு எம் ஜி ஆர் ஹீரோவானதும் , அதன் பிறகு பெரும்புகழ் பெற்றதும் உலகறிந்த வரலாறு. அவரின் வளர்ச்சிக்கு அவர் திமுகவில் இருந்ததும் ஒரு காரணம். அதுபோல அவரின் திரையுலக வெற்றி திமுகவுக்கும் பயன்பட்டது. கடவுள் பக்தராக இருந்தாலும் திமுகவில் இருந்ததால் எம் ஜி ஆர் வெளிப்படையாக கோயில்களுக்கு செல்ல மாட்டார். ஆனால் அவர் வீட்டில் அவர் பூஜை செய்வதுண்டு.
எம் ஜி ஆர் வளர்ந்து சூப்பர் ஸ்டார் நடிகர் ஆனதும், அதன் பின்னர் அவருடைய படங்களில் எல்லாவற்றையும் அவர் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வார். அதுதான் பின்னர் அவரின் அரசியலின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. எம் ஜி ஆர் ஒரு கட்டத்தில் தன்னுடைய உருவத் தோற்றத்தை வித்தியாசமாக மாற்றிக் கொண்டார்.
அதில் ஒன்றுதான் பின்னாளில் அவரின் அடையாளமாகவே ஆன கருப்புக் கண்ணாடி. ஒரு கட்டத்துக்குப் பிறகு எம் ஜி ஆர் எங்கு வெளிவந்தாலும் கருப்புக் கண்ணாடிதான். இதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளதாக நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.
அதில் “எம் ஜி ஆரின் கண்கள் மிகவும் எக்ஸ்பிரஸிவ்வான கண்கள். அதனால் ஒரு ஜோதிடர் அவரிடம் சொன்னாராம். இந்த கண்களால் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்பதை எதிரில் இருப்பவர்கள் தெரிந்துகொள்ளக் கூடாது. அதனால் கருப்புக் கண்ணாடி போட்டுக் கொள்ளுங்கள் என சொன்னதாக அந்த கருப்புக் கண்ணாடிக்குப் பின்னால் ஒரு கதை சொல்வார்கள்” என்று கூறியுள்ளார்.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…