எம் ஜி ஆரின் கருப்புக் கண்ணாடிக்குப் பிறகு இப்படி ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கா?… பிரபலம் பகிர்ந்த தகவல்!

By vinoth on மாசி 22, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 50 களில் இருந்து 77 வரை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால்தான் அரசியலுக்கு வந்தபோதும் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருந்தார்.

பல வருட போராட்டத்துக்குப் பிறகு எம் ஜி ஆர் ஹீரோவானதும் , அதன் பிறகு பெரும்புகழ் பெற்றதும் உலகறிந்த வரலாறு. அவரின் வளர்ச்சிக்கு அவர் திமுகவில் இருந்ததும் ஒரு காரணம். அதுபோல அவரின் திரையுலக வெற்றி திமுகவுக்கும் பயன்பட்டது. கடவுள் பக்தராக இருந்தாலும் திமுகவில் இருந்ததால் எம் ஜி ஆர் வெளிப்படையாக கோயில்களுக்கு செல்ல மாட்டார். ஆனால் அவர் வீட்டில் அவர் பூஜை செய்வதுண்டு.

   

எம் ஜி ஆர் வளர்ந்து சூப்பர் ஸ்டார் நடிகர் ஆனதும், அதன் பின்னர் அவருடைய படங்களில் எல்லாவற்றையும் அவர் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வார். அதுதான் பின்னர் அவரின் அரசியலின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. எம் ஜி ஆர் ஒரு கட்டத்தில் தன்னுடைய உருவத் தோற்றத்தை வித்தியாசமாக மாற்றிக் கொண்டார்.

   

 

அதில் ஒன்றுதான் பின்னாளில் அவரின் அடையாளமாகவே ஆன கருப்புக் கண்ணாடி. ஒரு கட்டத்துக்குப் பிறகு எம் ஜி ஆர் எங்கு வெளிவந்தாலும் கருப்புக் கண்ணாடிதான். இதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளதாக நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.

அதில் “எம் ஜி ஆரின் கண்கள் மிகவும் எக்ஸ்பிரஸிவ்வான கண்கள். அதனால் ஒரு ஜோதிடர் அவரிடம் சொன்னாராம். இந்த கண்களால் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்பதை எதிரில் இருப்பவர்கள் தெரிந்துகொள்ளக் கூடாது. அதனால் கருப்புக் கண்ணாடி போட்டுக் கொள்ளுங்கள் என சொன்னதாக அந்த கருப்புக் கண்ணாடிக்குப் பின்னால் ஒரு கதை சொல்வார்கள்” என்று கூறியுள்ளார்.