CINEMA
Sk-வை நம்பி 100 கோடிக்கு பிளான் போட்ட வெங்கட் பிரபு.. நம்ப வைத்து காலை வாரிய சிவகார்த்திகேயன்..!!
முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் அமரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கமல் தயாரிக்கும் இந்த படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அடுத்ததாக ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி படத்திலும் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் தளபதி விஜய் வைத்து கோட் படத்தை இயக்கிய பிறகு வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அந்த படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க இருந்தார்கள்.
சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்காக வெங்கட் பிரபு மொத்த ஸ்கிரிப்டையும் எழுதி முடித்துள்ளார். 100 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தில் சிவகார்த்திகேயனின் சம்பளம் மட்டும் 40 கோடியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் வெங்கட் பிரபுவுக்கு 20 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கலாம் என பேசப்பட்ட நிலையில் மீதி இருக்கும் 40 கோடியை வைத்து தான் படம் எடுக்க வேண்டும்.
இந்நிலையில் வெங்கட் பிரபு கூறிய கதையை கேட்டு சிவகார்த்திகேயன் வேறு ஒரு கதையை ரெடி பண்ணி கொண்டு வாங்க என திருப்பி அனுப்பி விட்டாராம். சிவகார்த்திகேயன் இப்படி காலை வாரி விட்டுட்டாரே என வெங்கட் பிரபு கடுப்பில் இருக்கிறாராம். இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.