விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது புதிய கதைகளத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மூன்று அண்ணன் தம்பிகள் ஒரே வீட்டில் மனைவிகளுடன் மகிழ்ச்சியாக வாழ்வதை அடிப்படையாகக் கொண்டு கதை நிமிர்ந்து கொண்டிருக்கும் சூழலில் ரோகிணியின் உண்மை முகம் எப்போது வெளிச்சத்திற்கு வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தற்போது வீட்டில் உள்ள மூன்று ஜோடிகளும் சிறந்த ஜோடிக்கான போட்டியில் கலந்து கொண்டிருந்தனர்.
அதில் பல கேள்விகளுக்கு நன்றாக பதில் சொல்லி முத்து மற்றும் மீனா ஜோடி வெற்றி பெற்று ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகையை வாங்கியுள்ளனர். முத்துவும் மீனாவும் தாங்கள் ஜெயித்த பணத்தை வைத்து மாடியில் புதிய அறை கட்டுவதற்கு பிளான் செய்துள்ளனர். மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் முத்துமீனா வாழ்வில் பிரச்சனை எழுகின்றது. மீனாவின் தம்பி சத்யா தன்னுடைய பிறந்தநாள் அன்று கோவிலில் அன்னதானம் கொடுக்கின்றார்.
இதற்கு மீனாவை அவர் அழைக்கின்றார். ஆனால் முத்து என்னை அழைக்காத இடத்திற்கு நீ போகக்கூடாது என்று கோபத்துடன் கூறியுள்ளார். ஆனால் ஸ்ருதி மீனாவின் மனதை மாற்றி அவரை கோவிலுக்கு அனுப்பி வைத்து விடுகிறார். கோவிலுக்கு வந்த முத்து மீனாவை கோபத்தில் முறைத்து பார்க்கிறார். மகிழ்ச்சியாக செல்லும் சீரியலில் அடுத்த சண்டை தான் ஆரம்பமாகும். அதேபோன்று இந்த முறையும் சண்டை சத்யாவால் வந்துள்ளது. இதனை காரணம் காட்டி சிட்டி தன்னுடைய சுய ரூபத்தை காட்டி இருவரையும் பிரித்து விடுவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…
தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…