கடந்த 1980 ஆம் ஆண்டு தமிழில் வெளியான மூடுபனி என்ற திரைப்படம் மூலம் நடிகராக தனது பயணத்தை தொடங்கியவர் தான் நடிகர் மோகன். இவர் என்னதான் கன்னடாவில் பிறந்து வளர்ந்தாலும் தமிழைத் தவிர பிற மொழிகளில் குறைந்த அளவிலேயே படங்களில் நடித்துள்ளார். கடந்த 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் பெரிய அளவில் திரைப்படங்களில் நடிக்காத மோகன் தற்போது மீண்டும் திரை உலகில் களம் இறங்கியுள்ளார். இந்த நிலையில் தனக்கும் இயக்குனர் மணிரத்தினத்திற்கும் இடையே நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
இயக்குனர் மணிரத்தினம் கன்னட மொழி திரைப்படங்கள் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர். தமிழில் முரளி நடிப்பில் ஆயிரத்து 985 ஆம் ஆண்டு வெளியான பகல் நிலவு என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட் இயக்குனராக மாறினார். ஆரம்பத்தில் தமிழில் இவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுக்காத இரண்டு படங்கள் என்றால் அது இதய கோவில் மற்றும் மௌனராகம் ஆகிய திரைப்படங்கள்தான்.
இந்த இரண்டு திரைப்படங்களிலும் மோகன் நாயகனாக நடித்திருந்தார். இப்படி இருக்கையில் 1990 ஆம் ஆண்டு பிரபல நடிகர் ரகுவரன் மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான அஞ்சலி திரைப்படத்தில் நடிக்க முதலில் மணிரத்தினம் மோகனை கதாநாயகனாக தேர்வு செய்துள்ளார். ஆனால் அந்த படத்தில் தன்னால் நடிக்க முடியாது என்று மோகன் கூறிய நிலையில் அதை ஏன் என்பது குறித்து அண்மையில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசி உள்ளார்.
அதாவது அஞ்சலி திரைப்படம் மனவளர்ச்சி இல்லாத ஒரு சிறிய குழந்தையை பற்றிய கதை. அந்தத் திரைப்படத்தில் அனைத்து விஷயங்களும் எதார்த்தமாக மக்களுக்கு பிடிக்கும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த மனநலம் பாதிக்கப்பட்டிருந்த குழந்தையை தனியறையில் அந்த தாயும் தந்தையும் வைத்து வளர்ப்பது போன்ற காட்சிகள் திரைப்படத்தில் இடம் பெற்றதால் அந்த ஒரு விஷயம் எனக்கு உடன்படாத நிலையில் நான் அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டேன் என்ற காரணத்தை மோகன் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…
பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…
கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…