“செல்போனை பிடுங்கி சித்திரவதை…” 2 பிள்ளைகளை தவிக்க விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

Spread the love

பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும் குடும்பத் தகராறு காரணமாகத் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு சந்தோஷ் என்பவருடன் திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஸ்ரீநிதியின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரைத் தொடர்ந்து மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தனது பெற்றோருடன் பேச முடியாதபடி ஸ்ரீநிதியின் செல்போனையும் அவரது கணவர் பறித்து வைத்துள்ளார்.

தொடர் சித்திரவதையால் மனமுடைந்த ஸ்ரீநிதி, கடந்த சனிக்கிழமை தனது வீட்டின் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீநிதியின் கணவர், மாமியார் உள்ளிட்ட நான்கு உறவினர்கள் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது ஸ்ரீநிதியின் கணவர் சந்தோஷை கைது செய்துள்ள ஏபிஎம்சி (APMC) போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய ஒரு குடும்பம் வரதட்சணை ஆசையால் சிதைந்து போனது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Devi Ramu

Recent Posts

“டெல்லிக்கு பறந்த ரகசிய ரிப்போர்ட்”… செல்வப்பெருந்தகைக்கு கல்தா? – அடுத்த தலைவர் இவர்தான்…. ராகுல் காந்தி எடுத்த அந்த ஒரு முடிவு…!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீது எழுந்துள்ள தொடர் சர்ச்சைகள், கட்சியின் மேலிடத்தை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது.…

3 minutes ago

“வினாடிக்கு ஒரு கால்… பெண் ஊழியருக்கு ‘டெக்னிக்கல்’ டார்ச்சர்”… டிசிஎஸ்-ஸில் அதிர்ச்சி… அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் உண்மை …!

நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில், பெண் ஊழியர் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்…

7 minutes ago

யார் அந்த கருப்பு ஆடு?…”ஜெயிச்சா மந்திரி.. தோத்தா காலி!”… நள்ளிரவில் பறந்த “கடைசி” போன் கால்… மா.செ.க்களுக்கு எடப்பாடி வைத்த மரண செக்…!

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளுக்கு விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை அரசியல்…

12 minutes ago

இனி ஒரு சொட்டுத் தண்ணீர் கூடப் போகாது?…. தண்ணீர் இல்லாமல் கதறும் பாகிஸ்தான்… இந்தியா கொடுத்த ‘மரண அடி’…!

பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவிடும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 1960-ம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர்…

21 minutes ago

“கனடா சென்றால் செட்டில் ஆகலாம்..!” கனவுடன் சென்ற இந்தியப் பெண்ணுக்கு நேர்ந்த கதி… கலங்க வைக்கும் பதிவு….!

கனடா கனவுத் தேசமாகத் தெரிந்தாலும், அங்கு நிலவும் எதார்த்த சூழல் பல இந்திய இளைஞர்களைத் திக்குமுக்காடச் செய்துள்ளது. இதற்குச் சான்றாக,…

26 minutes ago

“பணத்தை வாங்கிட்டு இப்படி பண்றாங்களே”… எடப்பாடியிடம் கதறிய குஷ்பு… அடுத்த நிமிடம் நடந்த அதிரடி….!

மதுரை மத்திய தொகுதியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் தேர்தல் கள நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நடிகை குஷ்பு…

34 minutes ago