பொதுவாகவே சினிமா பிரபலங்கள் முதல் கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் என அனைவரும் சமூக வலைத்தள கணக்குகளை பயன்படுத்துகின்றனர். அவர்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். அதன்படி இன்ஸ்டாகிராமில் அதிகம் பின் தொடரும் இந்திய பிரபலமாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். அவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 271 மில்லியன் ஃபாலோயர்ஸ் பின் தொடர்கின்றனர். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த lalalalisa என்பவர் 104 மில்லியன் ஃபாலோயட்ஸ் கொண்டு இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர்களைத் தொடர்ந்து அடுத்ததாக இன்ஸ்டாகிராம் அதிக பாலோயர்களை கொண்ட இந்திய பிரபலங்களின் பட்டியலில் ஷ்ரத்தா கபூர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
இவருக்கு தற்போது இன்ஸ்டாகிராமில் சுமார் 94.1 மில்லியன் ஃபாலோயர்ஸ் உள்ளனர். இவர் முதன் முதலில் கடந்த 2010 ஆம் டீன் பட்டி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு பாலிவுட்டில் தடம் பதித்தார். பிறகு அடுத்தடுத்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ஸ்ட்ரீ 2 படத்தின் மிகப்பெரிய வெற்றி அவரின் இன்ஸ்டாகிராம் ஃபாலோவியர்கள் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்தது.
இதன் மூலமாக அவர் அதிக பாலோயர்களை கொண்ட இந்திய நடிகையாக மாறியுள்ளார். உலக அளவில் சுமார் 456 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்திய இந்த திரைப்படத்தின் வெற்றி சந்தேகத்திற்கு இடமின்றி இவரின் பாலோயர்களை அதிகரிக்க செய்துள்ளது. இதன் மூலமாக தற்போது கோஹ்லி மட்டுமே ஆக்கிரமித்து உள்ள பிரத்தியேக 100 மில்லியன் பின் தொடர்பவர்கள் கிளப்பில் இவர் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு அடுத்ததாக பிரியங்கா சோப்ரா 92.3 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டு நான்காவது இடத்தில் உள்ள. அடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடி 91.8 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டு ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…