அதிமுகவில் இருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன், தற்போது கட்சியில் தனக்கு உரிய அங்கீகாரம் மற்றும் மரியாதை அளிக்கப்படவில்லை என கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தவெக தேர்தல் பிரசாரக் குழுவில், அனுபவமிக்க செங்கோட்டையனுக்கு மூன்றாவது இடமே வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு அடுத்தபடியாக அவர் வரிசைப்படுத்தப்பட்டிருப்பது, அவரது ஆதரவாளர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் உள்கட்சி நடைமுறைகளும் செங்கோட்டையனைப் போன்ற மூத்த தலைவர்களுக்குச் சங்கடத்தை உருவாக்குவதாகக் கூறப்படுகிறது. மாவட்டச் செயலாளர்களைத் தொடர்பு கொள்வதற்குக்கூட புஸ்ஸி ஆனந்திடம் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் இருப்பதும், கட்சி ஆலோசனைக் கூட்டங்களில் எம்.ஜி.ஆர் பற்றிப் பேச முற்பட்டபோது “இங்கு விஜய் மட்டுமே தலைவர்” என அவர் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், டெல்லி அரசியல் வட்டாரங்களில் தமக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்த முன்வந்தபோதும், தலைமை அவரைப் புறக்கணித்ததாகச் சொல்லப்படுகிறது.
தன்னைப் போலவே தன்னுடன் வந்த ஆதரவாளர்களுக்கும் கட்சியில் முறையான பதவிகள் வழங்கப்படாதது செங்கோட்டையனை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. கட்சித் தலைவர் விஜயைச் சந்திக்கப் பல மணி நேரம் காத்திருந்தும் அனுமதி கிடைக்காத சூழலில், அவர் தற்போது தனது சொந்த ஊருக்கே திரும்பியுள்ளார். தவெகவில் மூத்தவர்களுக்கு மதிப்பில்லை எனக் கருதும் அவரது ஆதரவாளர்கள், தேர்தலுக்கு முன்பாகவே மாற்று முடிவுகளை எடுக்கலாம் என ஆலோசித்து வருவதால், செங்கோட்டையனின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு தமிழக அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், தொடர் திருட்டுகளால் கடுப்பாகிப் போயிருந்த பொதுமக்கள் நள்ளிரவில் கடையொன்றுக்குள் புகுந்த நான்கு கொள்ளையர்களைக்…
தமிழக முதலமைச்சரின் "தாயுமானவர் திட்டத்தின்" கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, கூட்டணி கட்சிகளுடன் பட்ஜெட் கூட்டத்தொடர், நிர்வாக…
குஜராத் மாநிலம் ஜுனாகத் பகுதியில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், தம்பதியர் இருவர் தங்களது மோட்டார்…
தமிழக அரசியல் களத்தில் கூட்டணிகள் வேகமாக மாறிவரும் நிலையில், வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்காமல்…
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக, காங்கிரஸ் இடையேயான கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான…