தமிழக அரசியல் களத்தில் கூட்டணிகள் வேகமாக மாறிவரும் நிலையில், வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்காமல் தனித்துப் போட்டியிடுவது குறித்து கட்சிக்குள் தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் திருவாரூரில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, “தமிழகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் திமுக தனித்துப் போட்டியிட வேண்டிய நேரம் வந்துவிட்டது; இனிமேல் கூட்டணி தேவையில்லை என்று தலைவர் அறிவிக்க வேண்டும்” என வெளிப்படையாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆ.ராசாவின் இந்தப் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த தலைவர் கலைஞர் கருணாநிதி வழியில் தாமும் கூட்டணியை இறுதிவரை பாதுகாக்கவே விரும்புவதாகவும், ஆனால் தற்போது கட்சியினரே கூட்டணி தேவையில்லை என்ற கருத்தை முன்வைப்பதால், அந்தக் கருத்தையும் விரைவில் பரிசீலிப்போம் என்றும் தெரிவித்துள்ளார். கூட்டணி தேவையில்லை என்ற கட்சியினரின் விருப்பம் “பரிசீலிக்கப்படும்” என்று ஸ்டாலின் குறிப்பிட்டிருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைய முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
மாறிவரும் அரசியல் சூழலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாகப் பல்வேறு கட்சிகள் மாறியுள்ள நிலையில், திமுக தனது தனிப்பட்ட வாக்கு வங்கியின் பலத்தை சோதித்துப் பார்க்க இதுவே சரியான தருணம் என்று கட்சியின் ஒரு தரப்பினர் கருதுகின்றனர். வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிடுமா அல்லது புதிய கூட்டணிகளை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இதில் எடுக்கப்படும் முடிவு 2031 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் அரசியல் பாதையைத் தீர்மானிக்கும் முக்கிய திருப்பமாக அமையலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.
மாணவர் பாரதிதாசனுக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை வழங்குவது தொடர்பாக எழுந்த சர்ச்சையில், அரசியல் கட்சிகளுக்கிடையேயான காரசாரமான விவாதங்கள்…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்துள்ள 'பத்தா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் விமரிசையாக…
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை 3,…
தமிழ்நாடு முதலமைச்சரும் பிரபல நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது முதல் முழுநீள ஆக்ஷன்-அட்வென்ச்சர் திரைப்படமான 'சிக்மா மூலமாக…
தென்மேற்கு பருவமழை நடப்பாண்டில் இயல்பை விடக் குறைவாகப் பெய்துள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுமையாக நிரம்பாமலேயே பாசனத்திற்காகத் தண்ணீர்…
நடிகரும் தற்போதைய தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள…