முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சினிமா பிரபலங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகள் மற்றும் பொய் செய்திகள் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, பணத்திற்காகவும் யூடியூப் ‘வியூஸ்’களுக்காகவும் நடிகைகளைப் பற்றி தவறான மனநிலையுடன் சிலர் அவதூறு பரப்புவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தாம் மது அருந்துவதை எப்போதும் எதிர்ப்பவர் என்றும், தனக்கு அந்தப் பழக்கமே இல்லை என்றும் கூறியுள்ள கஸ்தூரி, முன்பு விவாத மேடை ஒன்றில் முக்தர் என்பவர், தான் 40 ஆயிரம் ரூபாய்க்கு மது குடித்ததாகப் பொய் பேசியதைச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் தனது தோழியுடன் அவர் ஜாலியாக நடனமாடிய வீடியோவை, யாரோ சமூக வலைத்தளங்களில் ‘பாரில் மது அருந்திவிட்டு ஆடுகிறார்’ எனத் தவறாகப் பதிவிட்டதால், தனது தோழி மிகுந்த மனவேதனைக்கு உள்ளானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை போன்ற நகரங்களில் எத்தனையோ பார்கள், பப்புகள் மற்றும் டாஸ்மாக் கடைகள் இருக்கும்போது, அங்கு சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமா செல்கிறார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், அங்கு செல்லும் மற்றவர்களை விட்டுவிட்டு, சினிமாக்காரர்களை மட்டுமே குறிவைத்து ஏன் குற்றம் சொல்கிறார்கள் என்றும் தனது பேட்டியில் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…