நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… குஜராத்தில் பைக்கருக்கு நேர்ந்த பயங்கரம்… மழைநீருக்குள் மறைந்திருந்த எமன்…!

Spread the love

குஜராத் மாநிலம் ஜுனாகத் பகுதியில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், தம்பதியர் இருவர் தங்களது மோட்டார் சைக்கிளில் மழையில் நனைந்தபடி சாலையைக் கடக்க முயன்றனர். அப்போது, தேங்கியிருந்த மழைநீருக்கு அடியில் ஆழமான பள்ளம் ஒன்று மறைந்திருப்பது தெரியாமல், ஓட்டுநர் வண்டியை அதன் மீது இயக்கியுள்ளார். எதிர்பாராதவிதமாக பைக் சக்கரம் பள்ளத்தில் சிக்கியதில், நிலைதடுமாறிய தம்பதியினர் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர், தரையில் தல பலமாக மோதியதால் எழ முடியாமல் தவித்தார். அவருடன் பின்னால் அமர்ந்து வந்த பெண், லேசான காயங்களுடன் தப்பித்து அந்த நபரை தூக்க முயன்றார். இதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வழிப்போக்கர்கள் உடனடியாக ஓடிவந்து, படுகாயமடைந்த பைக்கரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தியாவில் ஒவ்வொரு பருவமழைக் காலத்திலும், இது போன்ற நீர் தேங்கிய சாலைகளும், அதற்குள் மறைந்திருக்கும் பள்ளங்களும் வாகன ஓட்டிகளின் உயிரைப் பறிக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றன.

https://twitter.com/DixitGujarat/status/2072603040142754168/video/1

இந்த விபத்து ஒருபுறமிருக்க, சம்பவ இடத்தில் பதிவான மற்றொரு காட்சி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த அதே தருணத்தில், அவசர உதவிக்கான ‘112’ காவல் ரோந்து வாகனம் ஒன்று அந்தப் பாதையைக் கடந்து சென்றது. சாலையில் இருவர் அடிபட்டு கிடப்பதைக் கண்டும், அந்த வாகனம் உதவ முன்வராமல் அப்படியே கடந்து சென்றது சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான அவசர கால மீட்பு வாகனமே இவ்வாறு அலட்சியமாகச் சென்றது ஏன் என்று இணையவாசிகள் பலரும் கேள்வி எழுப்பி தங்களது கண்டனங்களை அரசிடம் பதிவு செய்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் மோசமான சாலைப் பராமரிப்பு மற்றும் குடிமை அதிகாரிகளின் பொறுப்பற்ற தனத்தை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. அதே வேளையில், பருவமழைக் காலங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், வேகத்தைக் குறைத்து பாதுகாப்பான முறையில் வாகனங்களை இயக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். சாலைகளில் மறைந்திருக்கும் இத்தகைய ஆபத்துகளைக் களைய, அரசு நிர்வாகம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.

SATHISH R

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

6 minutes ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

7 minutes ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

13 minutes ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

17 minutes ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

19 minutes ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

26 minutes ago