டெல்லிக்குச் சுற்றுலா வந்த ரஷ்ய நாட்டு இளம் பெண் ஒருவர், விமான நிலையத்திற்கு வெளியே ஏழைப் பெண்கள் சிலர் உதவி கேட்பதைக் கண்டுள்ளார். அவர்களுக்கு நேரடியாகப் பணம் தராமல், அருகில் உள்ள மளிகைக் கடைக்குச் சென்று ரூ.1400 மதிப்பிலான ரேஷன் பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த சமூக வலைதளப் பிரபலம் ஒருவருக்குப் பொருட்களின் அளவைப் பார்த்துச் சந்தேகம் எழுந்துள்ளது.
அவர் அந்தப் பெண்ணை மீண்டும் அதே கடைக்கு அழைத்துச் சென்று MRP விலையைக் கூட்டிப் பார்த்தபோது, உண்மையான பில் ரூ.1100 மட்டுமே என்பது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர், “வெளிநாட்டுப் பயணி என்பதால் ஏமாற்றுகிறீர்களா?” எனக் கடைக்காரரைக் கண்டித்து, மீதி ரூ.300-ஐ அந்தப் பெண்ணிடம் மீட்டுத் தந்தார். இந்திய இளைஞரின் இந்த நேர்மையைக் கண்டு நெகிழ்ந்த ரஷ்யப் பெண், “உங்களைப் போன்ற நல்ல மனிதர்களால் தான் இந்தியா சிறந்த நாடாக விளங்குகிறது” எனக் கூறி நன்றி தெரிவித்தார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு மளிகைக் கடையில் கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு கொடூர சம்பவம்…
ராஜஸ்தான் மாநிலத்தில் 16 வயது சிறுவன் ஒருவன், தனது நண்பனுடன் இணைந்து தனது சொந்த தாத்தாவை கொடூரமாக படுகொலை செய்த…
பீகார் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அசோக் தாம் திருத்தலத்தில், சவன் மாத சிறப்பு வழிபாட்டிற்காக இன்று பெருமளவில் பக்தர்கள் திரண்டனர்.…
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் பிலாஸ்பூர் பகுதியைச் சேர்ந்த நஸ்ரீன் (40) என்ற பெண்ணை, அவரது கணவர் இஸ்ரார்…
வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகச் செயலிகள் வழியாக நமது பான் கார்டு மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் போன்ற முக்கிய…
கோரக்பூரைச் சேர்ந்த தம்பதிக்குத் திருமணமாகி 45 நாட்களே ஆன நிலையில், அவர்கள் அந்தமானுக்கு முதலிரவு கொண்டாட சென்றுள்ளனர். அங்குள்ள ஹோட்டலில்…