ராஜஸ்தான் மாநிலத்தில் 16 வயது சிறுவன் ஒருவன், தனது நண்பனுடன் இணைந்து தனது சொந்த தாத்தாவை கொடூரமாக படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தையின் மறைவின் போது தாத்தா எந்தவிதத் துக்கமும் அடையாமல் இருந்ததால், அவர் மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த கொடூரக் கொலையைச் செய்ததாக அந்தச் சிறுவன் தெரிவித்துள்ளான்.
தாத்தாவைக் கொல்வதற்கு முன்பாகக் கூகுளில் கொலை செய்வது எப்படி எனத் தேடிப் பார்த்த அந்தச் சிறுவர்கள், திட்டமிட்டபடி தாத்தாவை ஸ்க்ரூ டிரைவர் மற்றும் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பின்னர் சடலத்தை ஒரு மூட்டையில் கட்டி, ஸ்கூட்டரில் எடுத்துச் சென்று ஆற்றில் வீசி எறிந்துவிட்டு, இரத்தக் கறை படிந்த ஆடைகளையும் மூட்டையையும் எரித்து ஆதாரங்களை அழித்துவிட்டு வீட்டிற்குச் சென்று நிம்மதியாக உறங்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை, குற்றத்தில் ஈடுபட்ட சிறுவர்களைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள பிராமணி ஆற்றில் அபாய கட்டத்தைத் தாண்டி பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து முழுமையாகத்…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கையை தாக்கல் செய்த முதலமைச்சர் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களுக்கான…
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான அமர்ஜித் சிங் என்பவர் தனது மனைவி ராமாவை கொலை…
கர்நாடக மாநிலம் பெங்களூரு மடிவாளா காவல் எல்லைக்கு உட்பட்ட சிக்க அடுகோடி பகுதியில், 1 1/2 வயது குழந்தை ஒன்று…
தெலுங்கானா மாநிலம் ஜனகாமா பகுதியைச் சேர்ந்த மௌபள்ளி மானசா (20) என்ற இளம் பெண், தனது பெற்றோருடன் ஐதராபாத்தில் உள்ள…
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த கரும்பாறை கிராமத்தில், பிள்ளைகள் வெளியூரில் வசிப்பதால் தனிமையில் வாழ்ந்து வந்த 85 வயது முதியவர்…