காசா பகுதி முழுவதிலும் கடுமையான உணவு பஞ்சம் நிலவி வருகின்றது. விமான மூலம் வீசப்படக்கூடிய உணவுப் பொருட்களை சேகரிக்க பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக ஓடும் காட்சிகள் காண்போரை கண்கலங்க வைக்கிறது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போர் காரணமாக காசா எல்லை பகுதிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு வசிக்கும் மக்கள் ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் உயிரிழக்கும் நிலை நிலவுகிறது. இதனை உணர்ந்த சில நாடுகள் விமான மூலம் உணவுப் பொருள் அடங்கிய மூட்டைகளை பாராசூட் உதவியுடன் மேலே இருந்து கீழே வீசுகின்றன.
இதற்காக நீண்ட நேரமாக காத்திருந்து மக்கள் உணவை சேகரிக்க உயிர் போராட்டம் நடத்துகின்றனர். இப்படியான நிலையில் தன்னுடைய குழந்தை இரண்டு நாள் பட்டினியாக கிடப்பதாகவும் தான் சேகரித்த உணவை என்னை தள்ளிவிட்டு மற்றொருவர் எடுத்துச் சென்று விட்டதாகவும் பெண் ஒருவர் கூறும் வீடியோ காட்சி வெளியாகி கல்நெஞ்சையும் கரைய வைக்கிறது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…