காசா பகுதி முழுவதிலும் கடுமையான உணவு பஞ்சம் நிலவி வருகின்றது. விமான மூலம் வீசப்படக்கூடிய உணவுப் பொருட்களை சேகரிக்க பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக ஓடும் காட்சிகள் காண்போரை கண்கலங்க வைக்கிறது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போர் காரணமாக காசா எல்லை பகுதிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு வசிக்கும் மக்கள் ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் உயிரிழக்கும் நிலை நிலவுகிறது. இதனை உணர்ந்த சில நாடுகள் விமான மூலம் உணவுப் பொருள் அடங்கிய மூட்டைகளை பாராசூட் உதவியுடன் மேலே இருந்து கீழே வீசுகின்றன.
இதற்காக நீண்ட நேரமாக காத்திருந்து மக்கள் உணவை சேகரிக்க உயிர் போராட்டம் நடத்துகின்றனர். இப்படியான நிலையில் தன்னுடைய குழந்தை இரண்டு நாள் பட்டினியாக கிடப்பதாகவும் தான் சேகரித்த உணவை என்னை தள்ளிவிட்டு மற்றொருவர் எடுத்துச் சென்று விட்டதாகவும் பெண் ஒருவர் கூறும் வீடியோ காட்சி வெளியாகி கல்நெஞ்சையும் கரைய வைக்கிறது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சீனாவில், தண்ணீருக்குப் பதிலாக காய்கறி ஜூஸ் கலந்து பால் பவுடர் புகட்டப்பட்ட 3 மாதக் குழந்தை, உயிருக்கு ஆபத்தான நிலையில்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், மது போதையில் பெண் ஒருவர் நடுரோட்டில் படுத்துக்கொண்டு ரகளை செய்த வீடியோ சமூக…
உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ…
இந்திய இளம் கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்சியின் அதிரடியான பேட்டிங் முறை, அவரது மணிக்கட்டு மற்றும் உடலமைப்பில் நீண்ட கால…
லெபனான் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மறுபுறம்,…
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் யோகா உடை அணிந்து யோகாசனம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில்…