MLA அலுவலகத்தின் முன் எருமை மாடுகளை கட்டிவைத்துவிட்டு… தற்கொலைக்கு முயன்ற தம்பதி… என்ன காரணம் தெரியுமா..?

Spread the love

தெலுங்கானா மாநிலம் பூபால பள்ளி சிங்கரேணி குரகுலாவை சேர்ந்த ஓடேலு லலிதா தம்பதியினர் அங்குள்ள அரசு மருத்துவமனை அருகே வசித்து வருகின்றனர்.மேலும் அதன் அருகில் கொட்டகை ஒன்றை அமைத்து அதில் ஏராளமான எருமை மாடுகளை வளர்த்து வந்துள்ளனர். ஒரு சில நாட்களுக்கு முன்பு சாலை விரிவாக்கம் செய்ய உள்ள நிலையில் கொட்டகையை இடிக்க வேண்டும் என அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இருப்பினும் அதற்கு எந்த பதிலும் ஓடேலு அளிக்கவில்லை. அதை தொடர்ந்து நேற்று போலீஸ் அதிகாரிகளின் துணையோடு அவர்களது வீட்டிற்கு வந்து கொட்டகையை இடித்தனர்.

அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் தனது உறவினர் ரமேஷ் என்பவருடன் அவர்களுடைய எருமை மாடுகளை அங்குள்ள எம்.எல்.ஏ அலுவலக வளாகத்திற்கு கொண்டு வந்து கட்டி வைத்துள்ளனர். மேலும் எம்.எல்.ஏ.வின் தூண்டுதலில் பேரில் சட்ட விரோதமாக கொட்டகையை இடித்து விட்டதாக போராட்டம் நடத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் போராட்டத்தை கைவிட மறுத்ததால் அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது திடீரென ஓடேலு தன்னிடம் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பின்னர் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்கு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட லலிதா மற்றும் ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hema

Recent Posts

அடுத்த 4 நாட்களுக்கு நோ டென்ஷன்..! வெளியூர் போறீங்களா..? அரசு கொடுத்த அதிரடி குட் நியூஸ்…!!

முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை சிறப்பு பேருந்துகள்…

20 minutes ago

“20 ரூபாய் சாப்பாடு 120 ரூபாயா…?!” – வாரணாசி ரயில் நிலையத்தில் எகிறிய மாணவர்… ஓடிவந்து ஓனர் பர்ஸை காலி செய்த போலீஸ்…! வீடியோ வைரல்…!!

வாரணாசி ரயில் நிலையத்திற்கு வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அங்கிருந்த ஒரு உணவுக்கடையில் சோலே பட்டூரே வாங்கியுள்ளார். அதன்…

42 minutes ago

“எனக்கு கேக் எல்லாம் வெட்ட வேண்டாம்” வாயு கசிவு விபத்தினால் பிறந்தநாள் கேக்கை திருப்பி அனுப்பிய முதல்வர் விஜய்..!!

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள்,…

56 minutes ago

பகீர்.. மரணக் குவியலாக மாறிய லக்னோ கட்டிடம்… கொளுந்துவிட்டு எரிந்த தீயில் 14 உயிர்கள் சாம்பல்… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புர்னியா பகுதியில் உள்ள ஒரு பல்லடுக்குக் கட்டிடத்தில் திங்கட்கிழமை…

56 minutes ago

ச்சீ.. பெற்ற தாய் என்றும் பாராமல்… வெளிநாடு செல்ல ரூ.20 லட்சம் கேட்டு… கழுத்தை நெரித்து கொடூரமாக தாக்கிய மகன்… குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்…!

குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற பேராசையினால் பெற்ற தாயையே தாக்கி, லட்சக்கணக்கில் பணம் மற்றும்…

1 மணத்தியாலம் ago

அடிக்கடி வயிற்று வலி நாடகம்… டாய்லெட் ஃபிளஷுக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி… நீட் தேர்வில் மாணவர் செய்த பகீர் மோசடி அம்பலம்..!!

நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான…

1 மணத்தியாலம் ago