#image_title
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நந்தினி’ சீரியலின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ராகுல் ரவி. மாடலிங்கில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர், 2013 ல் நடிகராக அறிமுகமானார். மலையாளத்தில் ஃபகத் பாசில், துல்கர் சல்மான் என பிரபல நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த இவர், பின்னர் சின்னத்திரையில் ‘ பொன்னம்பிளி’ என்ற மலையாள சீரியல் மூலம் கால் பதித்தார்.
#image_title
இதைத்தொடர்ந்து இவர் தமிழில் ‘நந்தினி’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். மேலும் சாக்லேட் சீரியலிலும், சன் தொலைக்காட்சியில் சமீபத்தில்சேரி நிறைவடைந்த ‘ கண்ணான கண்ணே’ சீரியலிலும் தனது நடிப்பால் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். நடிகர் ராகுல் ரவி தனது நீண்ட நாள் காதலியான லட்சுமி நாயர் என்பவரை 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கேரள மாநிலம் பெரும்பாவூரில் 2020-ல் நடைபெற்றது.
இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே இவர்கள் பிரிந்துவிட்டதாகவும் தற்பொழுது கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது நடிகர் ராகுல் ரவியின் மனைவி அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த புகாரில் அவர் கூறியுள்ளதாவது, ‘ அவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும்’ எப் ஐ ஆர் பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீஸ் விசாரணைக்கு பயந்து நடிகர் ராகுல் ரவி தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து நீதிமன்றம் அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இதனால் போலீசார் அவரை சென்னையில் தீவிரமாக தேடி வருகின்றனர். தற்பொழுது இத்தகவல் சின்னத்திரை வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த…
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான லீக் போட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும், கனகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணமாகி, 4½…
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பட்நகர் பகுதியில், கடந்த ஜூன் 18 ஆம் தேதி நள்ளிரவில் அரங்கேறியுள்ள…
விலங்குகளின் வேட்டைத் திறன் எப்போதுமே மனிதர்களை வியப்பில் ஆழ்த்தத் தவறுவதில்லை. காடுகளிலும் நீர்நிலைகளிலும் தினந்தோறும் அரங்கேறும் இந்த வாழ்வாதாரப் போராட்டங்கள்,…
சென்னையில் லஞ்ச விவகாரத்தில் லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஒழுங்கு நடவடிக்கை பிரிவு உதவியாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் அதிரடியாகக் கைது…