BREAKING: விலகுகிறேன்… செல்வபெருந்தகை பரபரப்பு அறிவிப்பு… தமிழக அரசியலில் திடீர் திருப்பம்…!

Spread the love

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த முடிவை ராகுல் காந்தியிடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டதாகவும், தேர்தல் முடிவுகள் வெளியான பின் முழுமையாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களின் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநிலத் தலைவராகப் பணியாற்றியதில் மனநிறைவு இருப்பதாகவும், எவ்வித அழுத்தமும் இன்றி சுயமாகவே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

திமுக கூட்டணியில் இம்முறை காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர் தேர்விலும் ஒதுக்கீட்டிலும் கடும் இழுபறி நீடித்தது. இறுதியாக 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், செல்வபெருந்தகை மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மாநிலத் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் பல திட்டங்களைத் தீட்ட முடிந்தாலும், கட்சிக்குள் உறவுகளைப் பேணுவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்ததாக அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். “தமிழகத்தின் பிள்ளையாக இருந்த நான், இனி ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் பிள்ளையாக மாறுவேன்” என அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், செல்வபெருந்தகையின் இந்த திடீர் விலகல் முடிவுக்குப் பின்னால் கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசல்களே முக்கியக் காரணம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்து காங்கிரஸில் இணைந்த செல்வபெருந்தகைக்கும், கட்சியின் பாரம்பரியத் தலைவர்களுக்கும் இடையே நீண்டகாலமாகவே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. குறிப்பாக, தற்போதைய வேட்பாளர் தேர்வில் கட்சிக்கு உழைத்தவர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும், முறைகேடுகள் நடந்ததாகவும் எழுந்த புகார்கள் அவர் மீது நேரடித் தாக்குதலாக அமைந்தன. இத்தகைய விமர்சனங்கள் மற்றும் மூத்த தலைவர்களின் அதிருப்தி ஆகிய காரணங்களே அவரை இந்த அதிரடி முடிவை எடுக்கத் தூண்டியதாகக் கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

இதுதான் காதலின் உச்சமா?… உலகப் புகழ்பெற்ற நியூயார்க் கோபுரத்தில் காதலர்களின் முத்த மழை… உலகத்தையே கதி கலங்க வைத்த சாகசம்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…

24 minutes ago

BREAKING:விஜய் அரசை வீழ்த்த கார்ப்பரேட் டீல்?… தவெக MLA-க்களை தூக்க பாய்ந்த ரூ .180 கோடி… நட்சத்திர விடுதியில் நடந்த நள்ளிரவு சதி…!

தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்குக் குதிரை பேரம் பேசப்பட்டதாக…

45 minutes ago

அங்க வாங்க பணம் தரேன்… ஜிபே (GPay) பண்றேன்னு கூட்டிட்டு போய்… வெறும் ₹1500 பில்லுக்காக இந்த கொடூரமா?… மருத்துவமனையில் அரங்கேறிய அந்த நள்ளிரவு கொடூரம்… வைரல் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…

57 minutes ago

மும்பையை உலுக்கும் கனமழை… நடுத்தெருவில் நசுங்கிய சொகுசு கார்… மரண விளிம்பில் இருந்து மீண்ட ‘நாகின் 7’ நடிகர்… இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பகீர் வீடியோ…!

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…

1 மணத்தியாலம் ago

“மதுராந்தகம் டூ திருச்சி கிழக்கு”…. 7 தொகுதிகளில் திமுகவின் அடுத்த மூவ் இதுதான்… அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்…. அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்….!

தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…

2 மணத்தியாலங்கள் ago