கடவுள் மீதான நம்பிக்கை என்பது ஆன்மீகம் தான். ஆனால் ஒரு சிலர் இன்றளவும் மூடநம்பிக்கையை கொண்டுள்ளனர். அதன்படி ஒரு அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் அருகே அனந்தபூர் கிராமத்தை சேர்ந்த துகாராம், சாவித்திரி, ரமேஷ் மற்றும் வைஷ்ணவி உட்பட 21 பேர் உயிர்த்தியாகம் செய்ய உள்ளதாகவும் அவர்கள் கடவுளை காண்பதற்காக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தகவல் பரவியது. இது குறித்து போலீசார் மற்றும் அப்பகுதியில் உள்ள மாடாதிபதி ஆகியோர் வந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதாவது சந்தா ராம் பால் என்ற சாமியார் கடந்த 2014 ஆம் ஆண்டு கலவர வழக்கு ஒன்றில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் எழுதிய புத்தகத்தைப் படித்த துகாராம் உட்பட 21 பேரும் கடவுளைத் தேடி உயிர்த்தியாகம் செய்வதற்கு முன்வந்துள்ளனர். அதன்படி வருகின்ற செப்டம்பர் எட்டாம் தேதி உன்னத கடவுள் பூமிக்கு வர உள்ளார், அவர் அனைவரின் உயிரையும் எடுக்க உள்ளார் என்று துகாராம் உட்பட 21 பேரும் மக்களிடையே பிரச்சாரம் செய்து வந்துள்ளனர். அன்றைய தினம் தாங்கள் 21 பேரும் கடவுளை காண்பதற்காக உயிர்த்தியாகம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழக அரசியல் சூழலில் நடிகர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆட்சி அமைப்பதற்காக ஆளுநரிடம் சமர்ப்பித்த ஆதரவு கடிதத்தில் தனது கட்சியின் எம்.எல்.ஏ கையெழுத்தைப்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியமைத்தால் தமிழ்நாட்டிற்குப் பேரழிவு ஏற்படும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போலி கடித விவகாரம் குறித்து மன்னார்குடி அமமுக எம்.எல்.ஏ எஸ்.காமராஜ் அதிரடியான சவால்…
அமமுக எம்.எல்.ஏ காமராஜ் காரில் வைத்து கையெழுத்திட்டதாகக் கூறப்படும் வீடியோ குறித்து டி.டி.வி தினகரன் முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளார். சென்னையில்…
தமிழக அரசியலில் விசிக ஆதரவு அளித்தாலும், விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டிடிவி தினகரன் அளித்த…