தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆட்சி அமைப்பதற்காக ஆளுநரிடம் சமர்ப்பித்த ஆதரவு கடிதத்தில் தனது கட்சியின் எம்.எல்.ஏ கையெழுத்தைப் போலியாக இட்டுள்ளதாக (Forgery) அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். “அமமுக எம்.எல்.ஏ ஆதரவு அளிப்பதாக இருந்தால், அவரையும் ஆளுநரைச் சந்திக்க நேரில் அழைத்துச் சென்றிருக்கலாமே?” எனக் கேள்வி எழுப்பிய அவர், போலி கடிதத்தைக் கொடுத்துவிட்டுப் பின்னால் குதிரை பேரம் பேசவே விஜய் இத்தகைய திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளதாகத் தனது அடுக்கடுக்கான புகாரில் தெரிவித்துள்ளார்.
தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிக்க விஜய் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறார். ஆனால், தனது கட்சி சட்டமன்ற உறுப்பினரைக் காணவில்லை என்றும், அவரை வற்புறுத்தி அல்லது முறையற்ற வழிகளில் தங்கள் பக்கம் இழுக்க தவெக முயல்வதாகவும் டிடிவி தினகரன் தெரிவிக்கும் இக்குற்றச்சாட்டுகள் 2026 தேர்தல் களம் முடிந்த பிறகும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மைக்கு…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்று வரும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், 6 முக்கியமான எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்கவில்லை…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு…
அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்ததாக வெளியான கடிதம் குறித்து டிடிவி தினகரன் கடும்…
தமிழக அரசியல் சூழலில் நடிகர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியமைத்தால் தமிழ்நாட்டிற்குப் பேரழிவு ஏற்படும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்…