இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை PM YASASVI Top Class Education In Schools for OBC, EBC & DNT Students கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இதர பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டோர், பின்தங்கியவர்கள் மற்றும் சீர் மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நடப்பு கல்வி ஆண்டுக்கு தேசிய கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு 2.50 லட்சம் ஆக இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு ஏற்கனவே கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கும் இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 15 இன்றுடன் நிறைவடைகிறது. இந்த திட்டம் 9,11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பயன்பெறலாம். இந்தத் திட்டத்தில் விண்ணப்பி https://scholarships.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
ரயிலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பயணத்தின் போது 3 பேர் மட்டுமே…
மும்பை ஜோகேஷ்வரி ரயில் நிலையத்தில் செப்டம்பர் 16 அன்று நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர் நாகேஷ் மோஹிதே, ஓடிக்கொண்டிருந்த…
கர்நாடக மாநிலம் சன்னகிரி தாலுகாவிற்குட்பட்ட அஜ்ஜிஹள்ளி கிராமத்தில், சக்தி குமார் என்பவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.…
ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான ஆர்டிசி எக்ஸ் ரோட் ஸ்டீல் பாலப் பகுதியில், மனோஜ் என்ற இளைஞர் பாலத்தின் மேலிருந்து திடீரெனக்…
தெற்கு டெல்லியின் ஆர்கே புரம் பகுதியில் வியாழக்கிழமை இரவு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வேகமாக வந்த கார் ஒன்று,…
உத்தராகண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் பகுதியில், கடந்த ஆகஸ்ட் 15 அன்று ஈ-ரிக்ஷா ஒன்றிற்குள் பெண் ஒருவர் ஆபத்தான…