தெற்கு டெல்லியின் ஆர்கே புரம் பகுதியில் வியாழக்கிழமை இரவு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வேகமாக வந்த கார் ஒன்று, வீதி ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த நபர் உடனடியாகச் சாலையில் தூக்கி வீசப்பட்டு, நல்வாய்ப்பாகப் பலத்த காயங்களின்றி உயிர்தப்பினார்.
ஆனால், விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல், மோட்டார் சைக்கிளைத் தனது அடியில் சிக்க வைத்துக்கொண்டு அரை கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலையில் உரசியபடியே அதிவேகமாக இழுத்துச் சென்றுள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் ஆப்பிரிக்கா அவென்யூ சாலை வழியாக அந்த காரை தீவிரமாக விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து நிறுத்தினர். இதுகுறித்துத் தகவலறிந்து வந்த காவல்துறையினர், காரை இயக்கிய 73 வயது முதியவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயிலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பயணத்தின் போது 3 பேர் மட்டுமே…
மும்பை ஜோகேஷ்வரி ரயில் நிலையத்தில் செப்டம்பர் 16 அன்று நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர் நாகேஷ் மோஹிதே, ஓடிக்கொண்டிருந்த…
கர்நாடக மாநிலம் சன்னகிரி தாலுகாவிற்குட்பட்ட அஜ்ஜிஹள்ளி கிராமத்தில், சக்தி குமார் என்பவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.…
ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான ஆர்டிசி எக்ஸ் ரோட் ஸ்டீல் பாலப் பகுதியில், மனோஜ் என்ற இளைஞர் பாலத்தின் மேலிருந்து திடீரெனக்…
உத்தராகண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் பகுதியில், கடந்த ஆகஸ்ட் 15 அன்று ஈ-ரிக்ஷா ஒன்றிற்குள் பெண் ஒருவர் ஆபத்தான…
அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மூலம் மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் பாரதிதாசன் என்ற தலித் மாணவர்,…