பொதுமக்கள் மற்றும் எளிய மக்களின் அவசரத் தேவைகளுக்குப் பெரிதும் உதவக்கூடிய தங்கக் கடனுக்கான (Gold Loan) புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. இப்புதிய அறிவிப்பின்படி, இனிமேல் கடன் தொகையின் அளவைப் பொறுத்து நகையின் மதிப்பில் குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே கடனாக வழங்கப்படும். அதன்படி, ₹2.5 லட்சம் வரை கடன் பெறுபவர்களுக்கு தங்கத்தின் மதிப்பில் 85% தொகையும், ₹2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை கடன் பெறுபவர்களுக்கு 80% தொகையும், ₹5 லட்சத்திற்கு மேல் கடன் பெறுபவர்களுக்கு 75% தொகையும் கடனாகக் கிடைக்கும்.
இந்த புதிய நடைமுறையில் மிகப்பெரிய நிம்மதியான விஷயம் என்னவென்றால், ₹2.5 லட்சத்திற்கும் குறைவாகத் தங்கக் கடன் வாங்குபவர்களுக்கு எவ்வித வருமான சான்றிதழோ (Income Proof) அல்லது சிபில் ஸ்கோர் (CIBIL Score) சரிபார்ப்போ தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் எவ்வித அலைச்சலும், தாமதமும் இன்றி தங்களின் அவசரத் தேவைகளுக்கு மிக எளிதாகக் கடன் பெற முடியும் என்பதால் இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
புதுச்சேரி திலகர் நகரைச் சேர்ந்த பியூடிஷனான ராஜமாதங்கி (25) என்பவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், கணவர் சரவணன்…
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4ஆம் தேதியன்று பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டன. அன்றைய தினம்,…
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக)…
அண்ணாமலை தனி கட்சி தொடங்கியதால் பாரதிய ஜனதா கட்சிக்கு எந்தவித பின்னடைவும் இல்லை என்று தமிழக பாஜக மாநிலச் செயலாளர்…
பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, தற்போது புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியிருக்கும் அண்ணாமலை, தேசிய அரசியலில் இருந்து மீண்டும் மாநில…
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்கட்டமைப்பு பணிகளை விரைவுபடுத்தவும், பொதுமக்களுக்கான சேவைகள் மற்றும் தூய்மையைப் பராமரிக்கவும் தமிழ்நாடு அரசின்…