Connect with us

CINEMA

லியோ வெற்றி விழாவில் ரஜினிகாந்த் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய ரத்தினகுமார்.. அப்படி என்ன சொன்னாரு..?

இந்த வெற்றி விழாவில் விஜய், திரிஷா, மிஸ்கின், அர்ஜுன், கௌதமேனன், மன்சூர் அலிகான், பிக் பாஸ் ஜனனி, மேத்யூ தாமஸ், மடோனா செபாஸ்டின் மற்றும் படத்தொகுப்பாளர் பிலோமினாஸ், கலை இயக்குனர் சதீஷ்குமார் நடிகர் விஜய்யின் தாய் சோபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Actor Vijay

   

இந்நிலையில் இயக்குனரும் லியோவின் வசனகர்த்தாவில் ஒருவருமான ரத்னகுமார் விழாவில் பேசியபோது எத்தனை பேர் இருந்தாலும் என் ஃபோக்கஸ் விஜய் சார் மேல தான் உள்ளது. எனக்கு சினிமா ஆசை வரதுக்கு முக்கிய காரணம் விஜய் சார் தான். பத்திரிக்கையில் எல்லாம் இவர் முகத்தை போட மாட்டோம் என்று சொன்னதாக கேள்விப்பட்டேன். இன்னைக்கு மாஸ் காட்ட அவரோட ஒரு புகைப்படம் இருந்தால் போதும்.

மாஸ்டர் படத்தில் கதைக்காக வாத்தி ரைடு பாடலை எழுதினோம். ஐடி ரைட் வந்தது. லியோவில் நான் ரெடி தான் பாடலை எழுதினோம். அது எதுக்குன்னு இப்போது உங்களுக்கு தெரியும். விஜய் சார் கூட சேர்ந்து இரண்டு படம் பண்ணி இருக்கேன். அவர்கிட்ட பேசும்போது யாரையும் நீக்க வைக்க மாட்டார். உடனே சேர எடுத்துட்டு வர சொல்லுவார். அவரை பொறுத்தவரை சின்னவங்க பெரியவங்க அப்படின்னு கிடையாது. எல்லாரையும் சமமாக தான் நடத்துவார்.

எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசிச்சா கீழ தானே வரணும் என பேசி இருந்தார். முன்னதாக ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி காகம் ஒரு இடத்தில் இருக்காது. அங்கும் இங்கும் பறந்து கொண்டே இருக்கும். மற்ற பறவை விலங்குகளை தொந்தரவு செய்யும். ஆனால் பருந்து அமைதியாக இருந்து காகம் தொந்தரவு செய்தால் கூட வேகமாக உயிர பறந்து விடும்.

அது போன்று காகம் உயரமாக பறக்க ஆசைப்பட்டால் பறக்க முடியாது. கீழே வந்து விடும். அந்த வகையில் மௌனம் தான் சிறந்தது என சூப்பர் ஸ்டார் பேசியிருந்தார். தற்போது லியோ வெற்றி விழாவில் ரத்தினகுமார் பசித்தால் கீழே தான் வரவேண்டும் என சூப்பர் ஸ்டாரை தாக்கியதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top