Connect with us

CINEMA

அந்த ஹீரோயினை கல்யாணம் பண்ணிக்காதப்பா.. அஜித் ஷாலினியை லவ் பண்ணுவது தெரியாமல் அஜீத்துக்கு புத்திமதி சொன்ன நடிகர் ரமேஷ் கண்ணா..

நடிகர் அஜீத்குமார், ஷாலினி இணைந்து நடித்த படம் அமர்க்களம். இந்த படத்தை இயக்கியவர் இயக்குநர் சரண். இந்த படத்தில் தியேட்டர் ஊழியரான அஜீத், ரவுடியாக இருப்பார். போலீஸ் அதிகாரி மகள் ஷாலினி, ரவுடி அஜீத்குமாரை காதலிப்பதுதான் கதை. இந்த படத்தில் நடித்த போது, இருவருக்குமே உண்மையான காதல் ஏற்பட்டு இருவரும் காதலித்தனர். ஆனால், அஜீத், ஷாலினி காதல் குறித்து தெரியாததால், ரமேஷ் கண்ணா அஜீத்குமாரை அழைத்து அட்வைஸ் பண்ணி இருக்கிறார். அதுவும் நடிகையை கல்யாணம் பண்ணிக்காதே என்றும் கூறியிருக்கிறார்.

   

இதுகுறித்து அமர்க்களம் படத்தின் டைரக்டர் சரண் ஒரு நேர்காணலில் கூறியதாவது, செஞ்சி மலைக்கோட்டையில் அமர்க்களம் ஷூட்டிங் எடுத்துக்கிட்டு இருக்கிறோம். அங்கு வந்த ரமேஷ் கண்ணா, அஜீத்குமாருக்கு பயங்கரமாக அட்வைஸ் பண்ணிக்கொண்டு இருந்தார். எனக்கு அஜீத், ஷாலினி காதல் இதெல்லாம் தெரியும்.

நான் ஷாட் எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். ரமேஷ் கண்ணா, இந்தபக்கமாக அழைத்து அஜீத்குமாரிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். நாம் இப்படி இருக்கணும், அப்படி இருக்கணுமுன்னு நிறைய அஜீத்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கிறார்.

அப்புறம் ரமேஷ் கண்ணாவை நான் கூப்பிட்டு, நீங்க அவர் கூட இந்த படத்துல சேர்ந்து நடிக்கணுமா, நடிக்கக் கூடாதா அப்படீன்னு கேட்டேன். ஏன் அப்படீன்னு கேட்டார். அவங்க ரெண்டு பேருக்குள்ள லவ் போயிட்டு இருக்கு. நீங்க சினிமா நடிகை எல்லாம் கல்யாணம் பண்ணாதேன்னு சொல்லிக்கிட்டு இருக்கறீங்க. ஷாலினியை பார்த்தா சினிமா ஹீரோயின் மாதிரி தெரியுதா உங்களுக்கு? அவங்க ஒரு பேமிலி கேர்ள்.

அவங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு பாண்டிங் உருவாகி போயிட்டு இருக்கு, என்றேன். இதெல்லாம் எனக்கு தெரியாதே என்றார். தெரியாம எதுக்கு அட்வைஸ் பண்றீங்க. ஒழுங்கு மரியாதையா இருங்க, போங்க, என்று சொன்னேன் என்று அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார் இயக்குநர் சரண். பல ஆண்டுகளுக்கு முன் அஜீத்குமாரிடமே, ஷாலினியை லவ் பண்ணாதே, கல்யாணம் பண்ணாதே என்று தெரியாமல் சொன்ன காமெடி நடிகர் ரமேஷ் கண்ணா குறித்த இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top